பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:28
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், "சிட்கோ' தொழிற்பேட்டைகளின் உற்பத்தி, அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமாக கிண்டி, அம்பத்தூர், திருமுடிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பெருங்குடி, காக்கலூர், கப்பலூர், திருச்சி பெல், ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் 93 தொழிற்பேட்டைகள் உள்ளன.இவையனைத்திலும், ஏராளமான குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், அலுமினிய வார்ப்படங்கள், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
வங்கி வட்டிதற்போது, ஏற்பட்டுள்ள மின்வெட்டால், இந் நிறுவனங்களின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஆர்டர்களை, குறித்த காலத்தில் வழங்க முடியாமல், அபாரதம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால், இந் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த ஆர்டர்களை, வெளி மாநில நிறுவனங்களுக்கு பெரிய நிறுவனங்கள் வழங்குகின்றன.
மேலும், வங்கிகளிடமிருந்து, இந் நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், தொழில் நடத்த முடியாமல், இத்தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கனகாம்பரம் கூறியதாவது:கிண்டி தொழிற்பேட்டையில், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதைச் சார்ந்து, ஆலந்தூர், சைதை, ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை, நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் குறு நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம், 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மின்வெட்டால், புதிய ஆர்டர்கள் எதையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள், வீட்டு வாடகை, குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் போன்றவற்றைக்கூட கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சமூகச் சீரழிவு:ஓசூர் தொழிற்பேட்டை சங்கத் தலைவர் சம்பத், முன்னாள் தலைவர் தனசேகரன் ஆகியோர் கூறியதாவது:ஓசூரில், 2,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில், 1,500 நிறுவனங்கள், மாவட்ட தொழில் மையத்திடம் பதிவு செய்தவை. இந் நிறுவனங்கள், வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, அவற்றை உள் நாட்டின் முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன.மின்வெட்டால் மொத்தத்தில், 250க்கும் குறைவான நிறுவனங்களே ஜெனரேட்டர்களை பயன்படுத்துகின்றன. இதற்காகும் செலவைச் சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
நாள்தோறும், 150 கோடி ரூபாய்க்கும் மேல் விற்றுமுதல் நடக்கும் தொழிற்பேட்டையில், மின்வெட்டால் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. திடீரென ஏற்படும் மின்வெட்டால், உபகரணங்கங்கள் பழுதடைந்து விடுகின்றன. இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது.
குறித்த நேரத்தில், பொருட்களை வழங்க முடியாததால், ஆறு கி.மீ. தொலைவில் உள்ள பெங்களூருவில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் சென்று விடுகின்றன. மேலும், இதனால், தற்கொலை, கொள்ளை போன்ற சமுதாயச் சீரழிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜெனரேட்டருக்கு மானியம்:"அலுமினியம் வார்ப்பட பொருட்களைத் தயாரித்து வழங்குகிறோம். அரசின் சார்பில், 125 கி.வா., ஜெனரேட்டர் வாங்குவதற்கு மட்டும், 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது, 250 கி.வா, 500 கி.வா. ஜெனரேட்டர்கள் வாங்குவதற்கும் மானியம் வழங்க வேண்டும்' என்கிறார் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை துணைத் தலைவர் குமார்.
பெருங்குடி தொழிற்பேட்டை தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, "எலக்ட்ரானிக் பொறியியல் சாதனங்கள் தயாரித்து வருகிறோம். இதன்மூலம், 6,000க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், பெரும்பாலானோர் பெண்கள். தொடர் மின்வெட்டால், மாதத்திற்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது' என்றார்.
தூத்துக்குடி:தூத்துக்குடி குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் ஜெயராயன் கூறும்போது, " உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, பணம் கொடுக்க முடியவில்லை.
மின்வெட்டால், நிறுவனங்களின் உற்பத்தி குறைவதை அடுத்து, அந்நிறுவனங்களின் விற்றுமுதல் குறைகின்றன. இதையடுத்து, வங்கிகள், கடனை உடனடியாக கட்டும்படி öŒõல்வதுடன் விட்டு,"ஓவர் டிராப்ட்' தொகையையும் குறைத்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகின்றன' என்றார்.மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையின் தலைவர் ராஜேந்திரன் கூறும்போது, "400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம், 12 ஆயிரம் பேர் நேரடி வேலை பெற்றுள்ளனர். மின்வெட்டால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய விலையைச் சற்று உயர்த்தினால், அது, மற்ற மாநிலங்களின் விற்பனை விலையைவிட, அதிகமாகி விடுகிறது. இதனால், பெரிய நிறுவனங்கள் எங்களிடமிருந்து தயாரிப்புப் பொருட்களை வாங்க மறுக்கின்றன. தமிழக அரசு, "வாட்' வரியில்லாமல் டீசலை வழங்க வேண்டும்' என்றார்.
வேலை இழப்பு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு உற்பத்தி பாதிப்பு
வங்கிக் கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை
250 கி.வா., மற்றும் 500 கி.வா., ஜென@ரட்டர்கள் வாங்க
மானியம் வழங்க @காரிக்கை
"வாட்' வரி இல்லாமல் டீŒல் வழங்க கோரிக்கை
"ஓவர் டிராப்ட்' தொகையை குறைக்கச் öŒõல்லும் வங்கிகள்.- வீ.அரிகரசுதன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|