மின்வெட்டால் தொழிற்பேட்டைகள் மூடப்படும் அபாயம்மின்வெட்டால் தொழிற்பேட்டைகள் மூடப்படும் அபாயம் ... அதிக உற்பத்தி மற்றும் இறக்குமதியால் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.500 சரிவு அதிக உற்பத்தி மற்றும் இறக்குமதியால் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.500 ... ...
மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
02:30

சேலம்:மரவள்ளி கிழங்கு, உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளதையடுத்து, அதன் விலை சரிவடைந்துள்ளது. இதனால், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.தமிழகத்தில், 15 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. பிற மாவட்டங்களை விட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி விவசாயிகள் அதிகளவு உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும், 400க்கும் அதிகமான மரவள்ளி கிழங்கு ஆலைகள் செயல்படுகின்றன. மரவள்ளி கிழங்கு கடந்தாண்டுகளில் மூட்டை
350 முதல் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆலை அதிபர்கள், கிழங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அரவையின் போது ரசாயன பொருட்களை கலந்து, தரத்தை குறைத்ததால், மரவள்ளிக் கிழங்கு மாவுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு குறைந்தது.இதனால், ஆலை அதிபர்கள் மரவள்ளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மூட்டைக்கு, 110 ரூபாய் கொடுத்து கிழங்குகளை வாங்கி, மாவாக அரைத்து, குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். தற்போது, மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மரவள்ளி கிழங்கு டன்னுக்கு, 5,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு உற்பத்தியாளர் சங்கம் சார்பில், மரவள்ளி கிழங்கு விலையை நிர்ணயம் செய்யக் கோரி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது.அந்த மனுவில், தமிழகத்தில், 60 லட்சம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 73 கிலோ எடை கொண்ட மரவள்ளி மூட்டை, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 150 மூட்டை வரை கிடைத்தாலும், விலை குறைவாக இருப்பதால், விவசாயிகளுக்கு, 19 ஆயிரத்து, 500 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
60 லட்சம் ஏக்கரில் அறுவடையாகும் கிழங்குக்கு மொத்தம், ஒரு லட்சத்து, 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, டன்னுக்கு, 5,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மரவள்ளி உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, ஜூன் முதல் வாரத்தில் முதல்வர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடத்தி, மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)