மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்?மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்? ... ஈரோட்டில் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம்அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் ஈரோட்டில் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம்அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் ...
அதிக உற்பத்தி மற்றும் இறக்குமதியால் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.500 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
02:31

உள்நாட்டில் பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் கம்போடியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தாராளமாக அனுமதி வழங்கியதால், மொத்த வியாபாரிகள் பருத்தியை பதுக்கினர்; இதனால் பருத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. நூலிழை விலை தாறுமாறாக உயர்ந்தது. அதற்கேற்ப, ஜவுளி விலையை உயர்த்த முடியாமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை இருப்பில் வைக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருத்தியை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நடப்பாண்டு, 345 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதில், 80 லட்சம் பருத்தி பொதிகளை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் பருத்தி அறுவடை துவங்கி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி சுற்று வட்டாரத்தில் சிறுவலூர், பதிபாளையம், கூகலூர், பங்களாபுதூர், காசிபாளையம், கவுந்தபாடி உள்ளிட்ட பகுதிகளில், 1,000 ஏக்கருக்கும் மேல் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பருத்தி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவநேசன் கூறுகையில், "மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கின்படி, பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பருத்தி விலை குறைந்துள்ளது. ஒரு பொதி பருத்தி, 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது,' என்றார்.
கோபியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்," நடப்பாண்டு பருத்தி விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற வாரம் ஒரு குவிண்டால், 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது, நடப்பு வாரம், 3,500 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரே வாரத்தில் பருத்தி விலை, 500 ரூபாய் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)