அதிக உற்பத்தி மற்றும் இறக்குமதியால் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.500 சரிவுஅதிக உற்பத்தி மற்றும் இறக்குமதியால் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.500 ... ... விமான எரிபொருளை நேரடியாகஇறக்குமதி செய்ய ஏர் இந்தியா முடிவு விமான எரிபொருளை நேரடியாகஇறக்குமதி செய்ய ஏர் இந்தியா முடிவு ...
ஈரோட்டில் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம்அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
02:33

ஈரோடு:ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க கோரி, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்தது.இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி கூறியதாவது:ஈரோட்டில், நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. நான்கு இடங்களிலும் மாதிரிகள் வைக்க போதிய இடவசதி இல்லை. தனித்தனியாக ஏலம் நடப்பதால், விலை மாறுபடுகிறது.
நான்கு இடங்களில் எங்கு கொண்டு சென்றால், கூடுதல் விலை கிடைக்கும் எனத்தெரியாமல், விவசாயிகள் குழப்பம் அடைகின்றனர். மஞ்சளை கொண்டு செல்லும் வாகனங்களால், ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஈரோடு மஞ்சள் விவசாயிகளின், 15 ஆண்டுகள் கோரிக்கையான ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகத்தை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும்.
கருமாண்டி செல்லிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடத்தில் அல்லது வாடகை கட்டிடத்தில் ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க வேண்டும். அரசால் ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க இடம் ஏற்பாடு செய்ய இயலாது என்றால், இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில், வாடகைக்கு இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.
ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அனைத்து வகையிலும் இணைந்து செயல்படவும் உதவவும் தயார்.
மஞ்சள் விற்பனையில் விலை, எடை, பணப்பட்டுவாடா, சரக்கு ஒப்படைப்பு சீட்டு வழங்குதல், கமிஷன், வட்டி போன்றவற்றில் முறைகேடு நடக்கிறது. பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடப்பதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)