பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:34
புதுடில்லி:ஏர் இந்தியா நிறுவனம், விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் செலவினம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்ய, மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து, முதன்முதலாக தனியார் துறையைச் சேர்ந்த கிங் பிஷர் நிறுவனம், விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்யத் தொடங்கியது.இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும், விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது. இதற்கு அனுமதிகோரி, அயல்நாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகத்திடம் விண்ணப்பிக்க உள்ளதாக, ஏர் இந்தியா, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா, விமான எரிபொருளுக்காக, மாதம் 500 - 550 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது. விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வதன் மூலம், விமான நிலையங்களில் ஏர் இந்தியா, விற்பனை வரி செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், விமான எரிபொருளுக்கு 4 முதல் 32 சதவீதம் வரை விற்பனை வரி செலுத்துகிறது. விற்பனை வரியால், சிங்கப்பூர், துபாய் விமான நிலையங்களில், விமான எரிபொருளுக்காகச் செலுத்தப்படும் தொகையைவிட, 50 சதவீதம் கூடுதலாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|