பதிவு செய்த நாள்
28 பிப்2012
04:35
புதுடில்லி:முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்), அதன் பங்கின் விலையை 1,032 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
எம்.சி.எக்ஸ் நிறுவனம், 663 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ளும் வகையில், புதிய பங்கு வெளியீட்டை @மற்கொண்டது. பங்கு ஒன்றின் வெளியீட்டு விலை
860-1,032 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்புதிய பங்கு வெளியீடு, இம்மாதம் 22ம் தேதி தொடங்கி, 24ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 54 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தன. இதன் மதிப்பு, 36 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில், சில்லரை முதலீட்டாளர்களிடமிருந்து மட்டும், 24 மடங்கிற்கும் மேல் விண்ணப்பங்கள் வந்தன. பங்கு வெளியீட்டிற்கு, கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து, இந்நிறுவனம், 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றை, அதிகபட்ச விலையான, 1,032 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது, பங்கின் முகமதிப்புடன் ஒப்பிடுகையில் 103.2 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|