பதிவு செய்த நாள்
28 பிப்2012
04:41
புதுடில்லி:ஓ.என்.ஜி.சி.,நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக, நேற்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் மீண்டும் ஒத்தி போடப்பட்டுள்ளது.பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி.,நிறுவனத்தின் 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கடந்தாண்டு, பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், பங்கு வெளியீட்டு திட்டம் பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.
இறுதியாக, சென்ற நவம்பரில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பங்கு வெளியீடு, கடைசி கட்டத்தில் கைவிடப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டதையடுத்து, ஓ.என்.ஜி.சி பங்கு வெளியீட்டை ஏல முறையில் மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது.இதற்கான தேதி மற்றும் பங்கின் விலை குறித்து முடிவு செய்ய, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற இருந்தது. பின்னர், இது ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டமும், பிரணாப், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இக்கூட்டம், இவ்வாரத்திற்குள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|