இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம்ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும்இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம்ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும் ... ஐஸ்கிரீம் விற்பனையை உயர்த்த நிறுவனங்கள் தீவிரம் ஐஸ்கிரீம் விற்பனையை உயர்த்த நிறுவனங்கள் தீவிரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஓ.என்.ஜி.சி பங்கு வெளியீடுதிட்டமிட்டபடி நடைபெறுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2012
04:41

புதுடில்லி:ஓ.என்.ஜி.சி.,நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக, நேற்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் மீண்டும் ஒத்தி போடப்பட்டுள்ளது.பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி.,நிறுவனத்தின் 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கடந்தாண்டு, பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், பங்கு வெளியீட்டு திட்டம் பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.
இறுதியாக, சென்ற நவம்பரில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பங்கு வெளியீடு, கடைசி கட்டத்தில் கைவிடப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டதையடுத்து, ஓ.என்.ஜி.சி பங்கு வெளியீட்டை ஏல முறையில் மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது.இதற்கான தேதி மற்றும் பங்கின் விலை குறித்து முடிவு செய்ய, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற இருந்தது. பின்னர், இது ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டமும், பிரணாப், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இக்கூட்டம், இவ்வாரத்திற்குள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)