இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம்ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும்இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம்ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும் ... நாட்டின் அரிசி ஏற்றுமதி 61 லட்சம் டன்னாக அதிகரிக்கும் நாட்டின் அரிசி ஏற்றுமதி 61 லட்சம் டன்னாக அதிகரிக்கும் ...
ஐஸ்கிரீம் விற்பனையை உயர்த்த நிறுவனங்கள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2012
04:44

மும்பை:கோடைக் காலம் துவங்க உள்ள நிலையில், ஐஸ் கிரீம் விற்பனையை அதிகரிக்க, அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
நாட்டில், ஐஸ் கிரீம் தயாரிப்பின் சந்தை மதிப்பு 2,500 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இவற்றிற்கான தேவையும் 25 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.
தற்போது, இந்தியாவில், தனிநபர் ஐஸ் கிரீம் பயன்பாடு, ஆண்டுக்கு 250-300 மி.லி. என்ற அளவில் உள்ளது. இது, அமெரிக்காவில், 23 லிட்டர் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது.
நடப்பாண்டில், ஐஸ் கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. இதனால், நடப்பாண்டில், இத்துறை, 15 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த அளவில், ஐஸ் கிரீம் தயாரிப்பில், அமைப்பு சாராத நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அமைப்பு சார்ந்த பிரிவின் கீழ், அமுல், இந்துஸ்தான் யூனி லீவர், வாடிலால், மதர் டெய்ரி போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
இந்நிறுவனங்கள், சென்ற ஜனவரி முதல் ஐஸ் கிரீம் வகைகளுக்கு ஏற்ப, அவற்றின் விலையை, 1 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
அமைப்பு சார்ந்த பிரிவில், அமுல் நிறுவனம், 40 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இந் நிறுவனம், ஐஸ் கிரீம் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அதன் விற்பனை மையங்களை, 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 92 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, 1,500 சிறிய கை வண்டிகள் மற்றும் 700 ஐஸ் கிரீம் பார்லர்கள் மூலம் விற்பனையை அதிகரிக்க உள்ளது.
வாடிலால் குழுமம், ஐஸ் கிரீம் தயாரிப்பில், இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. இந் நிறுவனத்திற்கு, குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் இரண்டு தயாரிப்பு ஆலைகள் உள்ளன.
மேலும், நாடு முழுவதும், 50 ஆயிரம் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட, "ஹேப்பினஸ்' என்ற பெயரில் விற்பனை நிலையங்களும் உள்ளன.
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், குவாலிட்டி வால்ஸ் என்ற பிராண்டில், ஐஸ் கிரீம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்பனை, சராசரி வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)