மின் விடுமுறையால் நூற்பாலைகளில் உற்பத்தி முடங்கும் அபாயம்மின் விடுமுறையால் நூற்பாலைகளில் உற்பத்தி முடங்கும் அபாயம் ... கிங்பிஷர் நிறுவனம் மூடப்படாது: அமைச்சர் அஜித் சிங் தகவல் கிங்பிஷர் நிறுவனம் மூடப்படாது: அமைச்சர் அஜித் சிங் தகவல் ...
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்...நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
02:02

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத சரிவு நிலையாகும்.
சுரங்கத் துறை:கணக்கீட்டு காலத்தில் தயாரிப்பு, சுரங்கம் மற்றும் வேளாண் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி மிகவும் குறைந்ததால், ஒட்டுமொத்த அளவில், பொருளாதார வளர்ச்சி குறைந்து போயுள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2010-11ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், இது, 8.3 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ஒன்பது மாத காலத்தில், 8.1 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில், பல்வேறு துறைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் சந்தை மதிப்பு, சேவை துறையின் மதிப்பு, மொத்த ஏற்றுமதி மதிப்பு, இவையனைத்தையும் கூட்டிக் கிடைக்கும் தொகையை, மொத்த இறக்குமதி மதிப்பில் கழித்து கிடைக்கும் தொகையை கொண்டு கணக்கிடப்படுகிறது.
இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (கிராஸ் டொமஸ்டிக் புராடக்ட் - ஜி.டீ.பி.) என்றும் அழைக்கப்படுகிறது.டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 0.4 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 7.8 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்திருந்தது.
வேளாண் துறை:இதேபோன்று, நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சியும், 2.7 சதவீதம் என்றளவில் மிகவும் குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 11 சதவீதம் என்றளவில் இருந்தது. மேலும், சுரங்கம் மற்றும் அது சார்ந்த துறையின் உற்பத்தி மூன்றாவது காலாண்டில், 3.1 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இ@த காலாண்டில் 6.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
கட்டுமானத் துறையின் உற்பத்தி வளர்ச்சியும்,8.7 சதவீதம் என்ற அளவிலிருந்து,7.2 சதவீதம் என்றளவில் குறைந் துள்ளது. இவைதவிர, வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தொலைத் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும், 9.8 சதவீதம் என்றளவிலிருந்து, 9.2 சதவீதம் என்றளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், மின்சாரம், எரிவாயு, குடிநீர் வினியோகம் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.8 சதவீதம் என்றளவிலிருந்து, 9 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது.காப்பீடு, ரியல் எஸ்டேட் போன்றவற்றை உள்ளட க்கிய சேவை துறையின் உற்பத்தி வளர்ச்சி, 11.2 சதவீதம் என்றளவிலிருந்து, 9.9 சதவீதமாக குறைந்துள்ளது.
மாறுபடும் புள்ளி விவரம்:இந்நிலையில், மத்திய புள்ளியியல் துறை, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதம் என்றளவில் இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது. அதேசமயம், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.1 சதவீதம் என்றளவில் இருக்குமென தெரிவித்துள்ளது.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்றளவில், மிகவும் அதிகரித்து காணப்பட்டது.ஒன்பது மாதங்கள்நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, 3.4 சதவீதமாக சரிவடைந்திருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 7.6 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது.
இதே காலத்தில், சுரங்கம் மற்றும் அதுசார்ந்த துறையின் உற்பத்தி, 1.4 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இத்துறை, 6.7 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது.மேலும், வேளாண், வனம் மற்றும் மீன் வளம் ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி, 6.8 சதவீதத்திலிருந்து, 3.2 சதவீதம் என்றளவில் குறைந்துள்ளது. இதே காலத்தில், கட்டுமானத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.70 சதவீதம் என்றளவிலிருந்து, 4.2 சதவீதமாக குறைந்துள்ளது.
தயாரிப்புத் துறை, சுரங்கம் மற்றும் அது சார்ந்த துறைகளில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, இத்துறைகளின் வளர்ச்சியை நிலை நிறுத்திடும் வகையில், ரிசர்வ் வங்கி, மார்ச், 15ம் தேதி, அறிவிக்க உள்ள அதன் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்: இந்நிலையில், வரும், 2012-13ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்ச் மாதம் 16ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். அப்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவிக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2011ம் ஆண்டு இறுதி வரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 13 முறை உயர்த்தியது. இதனால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் பன்மடங்கு உயர்ந்தது. இது, நாட்டின் தொழில் உற்பத்தியிலும், புதிய முதலீடு மேற்கொள்வதிலும் இடையூறாக உள்ளது என, இந்திய தொழில் துறை நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)