கிங்பிஷர் நிறுவனம் மூடப்படாது: அமைச்சர் அஜித் சிங் தகவல்கிங்பிஷர் நிறுவனம் மூடப்படாது: அமைச்சர் அஜித் சிங் தகவல் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 குறைவு ...
சென்னையில் முட்டை விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
10:20

சென்னை : பனிப்பொழிவு வடமாநிலங்களில் நீடிப்பதால் கோழி முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் முட்டை விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 3 கோடி கோழி முட்டைகள் நாளொன்றுக்கு சராசரியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 55 முதல் 60 லட்சம் வரை விற்கப்படுகின்றன. தமிழக முட்டை ஆந்திரா, டில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் புரட்டாசி மாதம், சபரிமலை சீசன் போன்ற காரணங்களால் முட்டைகள் விற்பனை சற்று மந்தமடையும் போது, வட மாநிலங்களில் கோழி முட்டைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதே போல வடமாநிலங்களில் வெயில் காலங்களில் முட்டை விற்பனை சற்று மந்தமடையும் சமயங்களில் தமிழகத்தில் முட்டைக்கான தேவை அதிகமாகும்.
இதனால் தமிழகத்தில் உற்பத்தியும், விற்பனையும் சம நிலையில் காணப்படுகிறது.
பனிப்பொழிவு குறையவில்லை வடமாநிலங்களில் பிப்ரவரியில் பனிப்பொழிவு குறைய ஆரம்பித்து வெயில் தீவிரமாகும். அதனால் அந்த காலத்தில் முட்டை தேவை குறைவாக இருக்கும்.ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலும் பனிப்பொழிவுக் குறையவில்லை. இப்போதும் பனி பெய்து வருவதால் கோழி முட்டைக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனால் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. பொதுவாக முட்டைகள் உற்பத்தியில் தேக்கமடையும் போது, அவை விலை குறைந்தும், தேவை அதிகளவில் இருக்கும் போது விலை அதிகரித்தும் காணப்படும். தற்போது முட்டைகளுக்கு வட மாநிலங்களில் வரவேற்புள்ளதால் தமிழகத்தில் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனை நிலையங்களில் சாதாரணமாக 2.50 ரூபாய் வரையிலும், சில்லறைக் கடைகளில் 2.75 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருந்தன. தற்போது முட்டை மொத்த விற்பனைக் கடைகளில் ரூ.2.92 வரையிலும் சில்லறைக் கடைகளில் ரூ.3.25 வரை விலையுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கழக தென் மண்டல தலைவர் மோகனரெட்டி கூறும் போது, 'மார்ச் மாதம் தொடங்கிய பின்னர் தான் முட்டை விலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் இன்னும் சில நாட்களுக்கு, இந்த நிலை தான் காணப்படும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)