பதிவு செய்த நாள்
01 மார்2012
15:34
பவர்ஃபுல் எஞ்சின் மற்றும் இதர புதிய அம்சங்களுடன் பெரிய நானோ காரை வடிவமைக்கும் பணிகளி்ல் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய நானோ மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் ஏராளமான புதிய நானோ காரை டாடா அறிமுகம் செய்தது. அதுமுதல், நானோவின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நானோ காரை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போவதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. இதற்காக, புதிய எஞ்சின் மற்றும் இதர மாற்றங்களை நானோ காரில் செய்கிறது டாடா. தற்போது நானோ காரில் 624 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 38 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். ஆனால், புதிதாக வரும் பெரிய நானோவில் 900 சிசி எஞ்சின் பொருத்தப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் 60 முதல் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெரிய டயர்கள், அதிக விட்டம் கொண்ட வீல்கள் என பெயரில் மட்டுமே நானோ காராக இருக்கும். மற்றபடி, அனைத்திலும் சிறந்த ஹெட்ச்பேக் காராக நானோ இருக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|