வர்த்தகம் » பொது
நிலக்கரி இறக்குமதி 14 கோடி டன்னாக உயரும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 மார்2012
16:34
புதுடில்லி: அடுத்த 2012-13ம் நிதி ஆண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 14 கோடி டன்னாக உயரும் என மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, நடப்பு நிதி ஆண்டில் 11.40 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள மொத்த நிலக்கரி வளத்தில் 10 சதவீதம் இந்தியாவில் உள்ளது. அதே சமயம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளில் இதை விட அதிக வளம் உள்ளதாக தெரிகிறது. எனினும் பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியாதான் சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாக திகழ்கிறது. நிலக்கரியை பிரதான எரிபொருளாக பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மற்றும் உருக்காலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் நிலக்கரிக்கான தேவைப்பாடு கடுமையாக உயர்ந்து வருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 02,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 02,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 02,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 02,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!