அமைப்பு சார்ந்த துறைகளில் 16 லட்சம் புதிய வேலைவாய்ப்பு அமைப்பு சார்ந்த துறைகளில் 16 லட்சம் புதிய வேலைவாய்ப்பு ... சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 4.71 லட்சம் டன்னாக குறைவு சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 4.71 லட்சம் டன்னாக குறைவு ...
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 50.38 ஆக வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2012
00:08

மும்பை: டாலருக்கு எதிராக, ரூபாயின் வெளிமதிப்பு, கடந்த ஒரு சில தினங்களாக சரிவடைந்து வருகிறது. இதையடுத்து, செவ்வாய் அன்று ரூபாயின் மதிப்பு 50.38 ஆக மிகவும் சரிவடைந்தது. இது, திங்களன்று, 49.83 ரூபாயாக இருந்தது.கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை செலுத்துவதற்காக, எண்ணெய் நிறுவனங்கள், டாலரை அதிகளவில் வாங்கியதால், ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது.மேலும், ராணுவ தளவாடங்களை, இறக்குமதி செய்ததற்கான தொகையை அளிப்பதற்காகவும், அதிகளவில் டாலர் வாங்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் தான், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது என, அன்னியச் செலாவணி வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, இனி வரும் மாதங்களில், இதற்கு செலவிடும் தொகை மேலும் அதிகரிக்கும். நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் 80 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.கடந்த ஒரு சில வாரங்களாக பங்கு வர்த்தகம் மிகவும் சுணக்கமாக உள்ளதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடும் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வகையில், செலாவணி வரத்து குறைந்துள்ளதாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)