பதிவு செய்த நாள்
07 மார்2012
00:08
மும்பை: டாலருக்கு எதிராக, ரூபாயின் வெளிமதிப்பு, கடந்த ஒரு சில தினங்களாக சரிவடைந்து வருகிறது. இதையடுத்து, செவ்வாய் அன்று ரூபாயின் மதிப்பு 50.38 ஆக மிகவும் சரிவடைந்தது. இது, திங்களன்று, 49.83 ரூபாயாக இருந்தது.கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை செலுத்துவதற்காக, எண்ணெய் நிறுவனங்கள், டாலரை அதிகளவில் வாங்கியதால், ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது.மேலும், ராணுவ தளவாடங்களை, இறக்குமதி செய்ததற்கான தொகையை அளிப்பதற்காகவும், அதிகளவில் டாலர் வாங்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் தான், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது என, அன்னியச் செலாவணி வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, இனி வரும் மாதங்களில், இதற்கு செலவிடும் தொகை மேலும் அதிகரிக்கும். நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் 80 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.கடந்த ஒரு சில வாரங்களாக பங்கு வர்த்தகம் மிகவும் சுணக்கமாக உள்ளதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடும் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வகையில், செலாவணி வரத்து குறைந்துள்ளதாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|