பதிவு செய்த நாள்
07 மார்2012
00:09
மும்பை,: சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 4 லட்சத்து 70 ஆயிரத்து 504 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியைவிட 33 சதவீதம் (7 லட்சத்து 3 ஆயிரத்து 400 டன்) குறைவாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஜப்பான், வியட்நாம், தென் கொரியா, சீனா, ஐரோப்பா ஆகிய நாடுகளில், இந்திய சோயா புண்ணாக்கிற்கு தேவை அதிகம் உள்ளது. இதையடுத்து, இந் நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.சென்ற ஜனவரி மாதத்தில், சோயா ஏற்றுமதி 16 சதவீதம் சரிவடைந்து, 5 லட்சத்து 76 ஆயிரத்து 383 டன்னிலிருந்து, 4 லட்சத்து 84 ஆயிரத்து 196 டன்னாக குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இதன் ஏற்றுமதி, 9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 45 லட்சம் டன்னிலிருந்து 49 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|