பதிவு செய்த நாள்
07 மார்2012
00:11
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. உத்தர பிரதேச மாநிலத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது என்ற செய்தியால், தொடக்கத்தில் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஆனால், இதர ஆசியப் பங்குச் சந்தைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டிருந்தன. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.மதியத்திற்கு பிறகு, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், மின்சாரம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 189.58 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,173.29 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,691.96 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,128.28 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 57.95 புள்ளிகள் சரிவடைந்து, 5,222.40 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,382.05புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,206.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|