பதிவு செய்த நாள்
07 மார்2012
10:16
மதுரை: மதுரை மாவட்டத்தில் எந்த "டீலரிடமும்' சமையல் காஸ் சிலிண்டர் இருப்பில் இல்லை. டாங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்வதால், மட்டப்பாறை சிலிண்டர் நிரப்பும் மையம், 3 நாட்களாக செயல்படவில்லை. இதனால், 6 மாவட்டங்களுக்கான சப்ளை நிறுத்தப்பட்டது.
மங்களூரில் இருந்து, டேங்கர் லாரிகள் மூலம், மதுரை அருகேவுள்ள மட்டப்பாறை பில்லிங் மையத்திற்கு, காஸ் கொண்டு வரப்பட்டு, சிலிண்டர்களில் நிரப்பப்படும். அங்கிருந்து மதுரை உட்பட, 6 மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். காஸ் வரத்து இல்லாததால், சனிக்கிழமை முதல், மட்டப்பாறை சிலிண்டர் நிரப்பும் மையம் செயல்படவில்லை. மதுரை மாவட்டத்திற்கு, மாதம் தோறும் தேவையான, மூன்றரை லட்சம் சமையல் காஸ் சிலிண்டர்கள், 32 டீலர்கள் மூலம், விநியோகிக்கப்படுகிறது. டாங்கர் லாரிகள் ஸ்டிரைக்கினால், இங்குள்ள எந்த டீலரிடமும், சிலிண்டர் தற்போது இருப்பில் இல்லை. மதுரை மாவட்டத்தில் மட்டும் 1.60 லட்சம் பேர், தற்போது சிலிண்டர் கேட்டு காத்திருப்பில் உள்ளனர். லாரி ஸ்டிரைக் உடனே முடிந்தாலும், சிலிண்டர் தட்டுப்பாடு தீர குறைந்தது ஒரு மாதம் ஆகும்.
மதுரை மாவட்ட விநியோக அதிகாரி சுந்தரேசன் கூறுகையில்,""ஆறு மாவட்டத்திற்கான மட்டபாறை சிலிண்டர் நிரப்பும் மையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 லோடு ( ஒரு லோடு 350 சிலிண்டர்கள்) மட்டும், மதுரை மாவட்டத்திற்காக பெற முடியும். இங்கு ஒரு லட்சத்திற்கு 60 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில் தினமும் 2 ஆயிரம் சிலிண்டர்களை வைத்து, நிலைமையை சமாளிப்பது சிரமம்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|