பதிவு செய்த நாள்
08 மார்2012
00:05
ஐதராபாத்: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், பெண்கள் மேற்கொள்ளும் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.இதன்படி, ஒரு ஆண்டு கால டெபாசிட்டிற்கு, தற்போதைய வட்டி விகிதத்தை விட, 0.50 சதவீதம் அதிகரித்து, 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தவிர, மூத்த பெண் குடிமக்கள் மேற்கொள்ளும் டெபாசிட்டிற்கு, கூடுதலாக 0.50 சதவீத வட்டி வழங்கப்படும். புதிதாக மேற்கொள்ளும் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இந்த வட்டி விகிதம் பொருந்தும்.சிறப்பு வட்டி விகித சலுகை திட்டத்தின் கீழ், பெண்களிடம் அதிகளவு டெபாசிட்டுகளை திரட்டும் வகையில், இன்றும், நாளையும் வங்கி கிளைகளின் வேலை நேரம் மாலை 6.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, இவ்வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|