பத்திக்கிச்சு... பத்திக்கிச்சு... விஸ்வரூபமெடுக்கிறது பருத்தி ஏற்றுமதி விவகாரம்  பத்திக்கிச்சு... பத்திக்கிச்சு... விஸ்வரூபமெடுக்கிறது பருத்தி ஏற்றுமதி ... ... ஒரு நாள் மின் விடுமுறை மதுரையில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு ஒரு நாள் மின் விடுமுறை மதுரையில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு ...
சம்பள பிரச்னை:ஏர் இந்தியா பைலட்கள் திடீர் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
09:51

புதுடில்லி :நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகையை உடனடியாகத் தராவிட்டால், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பணிக்கு வரமாட்டோம் என, ஏர் இந்தியா விமான நிறுவன பைலட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்டுகளுக்கு மாதச் சம்பளம் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் சிரமத்திலும், கடும் அதிருப்தியிலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என, பைலட்டுகள், இந்திய பைலட்டுகள் கில்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து, இந்திய பைலட்டுகள் கில்டு இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத்சிங், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியது. அதில், "ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் மற்றும் அலவன்சுகள் வழங்கப்படாமல் உள்ளது. சம்பளம் கிடைக்காமல், அவர்கள் நிதி நெருக்கடியில் சிரமப்படுகின்றனர். எனவே, அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கோரியுள்ளது.

இதுகுறித்து இந்திய பைலட்டுகள் கில்டின் தலைவர் ஜிதேந்திரா அவ்ஹாத் கூறுகையில், "எங்களது கில்டு உறுப்பினர்களை (பைலட்கள்) முடிந்தளவு போராட்டத்தில் ஈடுபடாமல், அவர்களை சமாதானப்படுத்த முயன்று வருகிறோம். இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணவேண்டும்' என்றார். இவ்வாண்டில் பைலட்டுகள் இவ்வாறு கோரிக்கை விடுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)