கிங்பிஷர் விமானத்திற்கு எரிபொருள் சப்ளை செய்ய ஹெச்.பி.சி.எல் சம்மதம்கிங்பிஷர் விமானத்திற்கு எரிபொருள் சப்ளை செய்ய ஹெச்.பி.சி.எல் சம்மதம் ... இந்தியாவுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை இந்தியாவுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை ...
எம்.சி.எக்ஸ்., நிறுவன பங்குகள் இன்று பட்டியலிடப்படுகின்றன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2012
00:01

மும்பை,: முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தின் பங்குகள், இன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.எம்.சி.எக்ஸ்,ல நிறுவனம், 35 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் வகையில், சென்ற பிப்ரவரி 22ம் தேதி, மூலதனச் சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.
பங்கு ஒன்றின் விலை 1,032 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த பட்சம் ஆறு பங்குகள் வீதம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த இவ்வெளியீட்டில், முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகள் வேண்டி 54 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன.இதையடுத்து, பங்குகளை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில், 126 முதல் 192 பங்குகள் வரை விண்ணப்பித்தவர்களுக்கு 6-8 பங்குகள் வரை ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குறைந்தபட்சம் 6 பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவர்களில், 13 பேருக்கு ஒருவர் வீதம், 6 பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதே போன்று 120 பங்குகள் வேண்டி விண்ணப்பித்தோரில், 13 பேருக்கு 11 பேர் வீதம், 6-8 பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.பங்கு ஒதுக்கீட்டுப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தின் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.இந்தியாவில், முதன்முதலாக முன்பேர சந்தை நிறுவனமொன்றின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)