எம்.சி.எக்ஸ்., நிறுவன பங்குகள் இன்று பட்டியலிடப்படுகின்றன எம்.சி.எக்ஸ்., நிறுவன பங்குகள் இன்று பட்டியலிடப்படுகின்றன ... அதிக அளவில் பருத்தி  தேக்கத்தால் கூட்டுறவு மையங்களில் ஏலம் ரத்து அதிக அளவில் பருத்தி தேக்கத்தால் கூட்டுறவு மையங்களில் ஏலம் ரத்து ...
இந்தியாவுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2012
00:02

புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 6 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டின் இதே மாதத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகளை விட, 6.6 சதவீதம் (6 லட்சத்து 36 ஆயிரம் பேர்) அதிகமாகும் என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கும் முந்தைய 2010ம் ஆண்டில், இந்தியா வந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15.1 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5 லட்சத்து 52 ஆயிரமாக உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், நம் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 13 லட்சத்து 59 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் வருகை தந்தவர்களைவிட,7.9 சதவீதம் (12 லட்சத்து 59 ஆயிரம் பேர்) அதிகமாகும்.கணக்கீட்டு காலத்தில்,வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், 27.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 13 ஆயிரத்து 430 கோடியிலிருந்து 17 ஆயிரத்து 125 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம், ரூபாய் மதிப்பில் கிடைத்த வருவாய், 8,502 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், கிடைத்த வருவாயைவிட, 11.1 சதவீதம் (7,653 கோடி ரூபாய்) அதிகமாகும். இது, 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 15.2 சதவீதம் உயர்ந்து, 6,646 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.மதிப்பீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையில் கிடைத்த வருவாய், 168.4 கோடி டாலரிலிருந்து 173 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டில், 143.4 கோடி டாலராக இருந்தது என, அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)