இந்தியாவுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை இந்தியாவுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை ... இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம் இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம் ...
அதிக அளவில் பருத்தி தேக்கத்தால் கூட்டுறவு மையங்களில் ஏலம் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2012
00:03

ஆத்தூர்: மின்தடை, பருத்தி விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும், 110 கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில், பருத்தி ஏலம் திடீரென ரத்து செய்யப்பட்டது.சேலம், ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில், பருத்தி, மஞ்சள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.110 கூட்டுறவு மையங்கள்அறுவடை செய்யும் மஞ்சள், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை, தமிழகத்தில் உள்ள, 110 கூட்டுறவு வேளாண்மை விற்பனை மையம் மற்றும் தனியார் கமிஷன் மண்டிகளில் நடக்கும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.சேலம், ஆத்தூர், வாழப்பாடி, கொளத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், கொங்கணாபுரம், கோவை, ஈரோடு, தர்மபுரி ஆகிய கூட்டுறவு மையங்களில், அதிகளவில் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது.இந்தாண்டு பருத்தி விளைச்சல் குறைந்த போதும், தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு ஒருநாள் விடுமுறை போன்ற காரணங்களால், பருத்தி தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.பருத்தி கொள்முதல்அதனால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, கூட்டுறவு மையங்களில் இருப்பு வைத்துள்ள பருத்தி மூட்டைகளை, வியாபாரிகள் எடுத்து செல்லாமல் உள்ளனர். இதில், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், ஐந்து வாரங்களாக நடந்த பருத்தி ஏலத்தில் கொள்முதல் செய்துள்ள, 11 கோடி ரூபாய் மதிப்பிலான, 60 ஆயிரம் பருத்தி மூட்டைகளும், திருச்செங்கோட்டில், 19 கோடி ரூபாய் மதிப்புள்ள பருத்தி மூட்டைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.சேலம், நாமக்கல் மாவட்டத்தின், கூட்டுறவு விற்பனை மையங்களில் மட்டும், 60 கோடி ரூபாய்க்கு மேலான பருத்தி இருப்பு உள்ளது. இதன் காரணமாக, கடந்த 2ம் தேதி முதல், கொள்முதல் செய்யப்படும் பருத்தி மூட்டைகளை இருப்பு வைக்க முடியாததால், பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டது.இன்று ஆத்தூரில் நடக்கும் பருத்தி ஏலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கூட்டுறவு மையங்களிலும், பருத்தி ஏலம் ரத்து செய்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. அதனால், விவசாய நிலத்தில் அறுவடை செய்த பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலர்கள் கூறியதாவது:கூட்டுறவு விற்பனை மையம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். கடந்த மாதம் 23ம் தேதி, ஆத்தூர் மையத்தில், 3.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. விவசாயிகள்ஐந்து வாரங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ள, 11 கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி மூட்டைகளை, வியாபாரிகள் பணம் செலுத்தி எடுத்து செல்லாததால், தொடர்ந்து ஏலம் நடத்த முடியாத நிலை உள்ளது. அதனால், இந்த வாரமும், கூட்டுறவு சங்கங்களில், பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)