இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம் இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம் ... நடப்பு நிதியாண்டின் 11 மாத காலத்தில்...  இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 51 கோடி டன் நடப்பு நிதியாண்டின் 11 மாத காலத்தில்... இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு ... ...
இந்திய ரயில்வே வருவாய் ரூ.93,000 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2012
00:06

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இந்திய ரயில்வே துறையின் வருவாய், 92 ஆயிரத்து 985 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வருவாயைவிட, 10.17 சதவீதம் (84 ஆயிரத்து 402 கோடி ரூபாய்) அதிகம் என, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சரக்குகளைக் கையாண்டதன் வாயிலாகக் கிடைத்த வருவாய், 10.24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 56 ஆயிரத்து 394 கோடியிலிருந்து 62 ஆயிரத்து 171 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் 9.57 சதவீதம் வளர்ச்சியடைந்து, 23 ஆயிரத்து 600 கோடியிலிருந்து 25 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வாடகை, தனி சேவை உள்ளிட்ட இதர வகையில் கிடைத்த வருவாய் 12.45 சதவீதம் அதிகரித்து, 2,295 கோடியிலிருந்து 2,580 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 5.21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 721 கோடியிலிருந்து 759 கோடியாக அதிகரித்துள்ளது. புறநகர் பகுதிகளில், ரயிலில் முன்பதிவு செய்து பயணித்தவர்களின் எண்ணிக்கை 3.70 சதவீதம் வளர்ச்சிகண்டு, 386 கோடியிலிருந்து 401 கோடியாகவும், புறநகர் சாராத பகுதிகளில் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 6.96 சதவீதம் வளர்ச்சியடைந்து, 300 கோடியிலிருந்து 358 கோடியாகவும் அதிகரித்துள்ளது என, ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)