பதிவு செய்த நாள்
09 மார்2012
00:06
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இந்திய ரயில்வே துறையின் வருவாய், 92 ஆயிரத்து 985 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வருவாயைவிட, 10.17 சதவீதம் (84 ஆயிரத்து 402 கோடி ரூபாய்) அதிகம் என, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சரக்குகளைக் கையாண்டதன் வாயிலாகக் கிடைத்த வருவாய், 10.24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 56 ஆயிரத்து 394 கோடியிலிருந்து 62 ஆயிரத்து 171 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் 9.57 சதவீதம் வளர்ச்சியடைந்து, 23 ஆயிரத்து 600 கோடியிலிருந்து 25 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வாடகை, தனி சேவை உள்ளிட்ட இதர வகையில் கிடைத்த வருவாய் 12.45 சதவீதம் அதிகரித்து, 2,295 கோடியிலிருந்து 2,580 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 5.21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 721 கோடியிலிருந்து 759 கோடியாக அதிகரித்துள்ளது. புறநகர் பகுதிகளில், ரயிலில் முன்பதிவு செய்து பயணித்தவர்களின் எண்ணிக்கை 3.70 சதவீதம் வளர்ச்சிகண்டு, 386 கோடியிலிருந்து 401 கோடியாகவும், புறநகர் சாராத பகுதிகளில் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 6.96 சதவீதம் வளர்ச்சியடைந்து, 300 கோடியிலிருந்து 358 கோடியாகவும் அதிகரித்துள்ளது என, ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|