இந்திய ரயில்வே வருவாய் ரூ.93,000 கோடியாக உயர்வு இந்திய ரயில்வே வருவாய் ரூ.93,000 கோடியாக உயர்வு ... கட்டுமான கம்பி விலை "கிடு கிடு' : 9 மாதங்களில் டன்னுக்கு ரூ.12,000 உயர்வு கட்டுமான கம்பி விலை "கிடு கிடு' : 9 மாதங்களில் டன்னுக்கு ரூ.12,000 உயர்வு ...
நடப்பு நிதியாண்டின் 11 மாத காலத்தில்... இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 51 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2012
00:07

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இந்தியத் துறைமுகங்களில், கையாளப்பட்ட சரக்குகள், 51 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், கையாளப்பட்ட சரக்குகளின் அளவை விட, 0.74 சதவீதம் (51.46 கோடி டன்) குறைவாகும்.இரும்புத் தாதுகணக்கீட்டு காலத்தில், இந்தியத் துறைமுகங்களில் கையாளப்பட்ட இரும்புத் தாது, 28.61 சதவீதம் சரிவடைந்து, 7.88 கோடி டன்னிலிருந்து 5.62 கோடி டன்னாக குறைந்துள்ளது. இதுதவிர, கையாளப்பட்ட உர வகைகள், 1.44 சதவீதம் குறைந்து, 1.20 கோடி டன்னிலிருந்து 1.18 கோடி டன்னாகவும்,"கோக்கிங் கோல்' எனப்படும் சிறப்பு வகை நிலக்கரி, 0.38 சதவீதம் குறைந்து, 2.61 கோடி டன்னிலிருந்து 2.59 கோடி டன்னாகவும் குறைந்துள்ளது. மேற்கண்ட பொருள்களின் அளவு குறைந்ததே, ஒட்டுமொத்த அளவில் துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள் குறைந்ததற்கு காரணம் என, இந்தியத் துறைமுகங்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எண்ணூர் துறைமுகம்உள்நாட்டில், ஒட்டு மொத்த அளவில், மிகப்பெரிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது என்றாலும், கணக்கீட்டு காலத்தில், எண்ணூர் துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 46.95 சதவீதம் வளர்ச்சிகண்டு, 92.41 லட்சம் டன்னிலிருந்து 1.36 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 7.84 சதவீதம் குறைந்து, 5.57 கோடி டன்னிலிருந்து 5.13 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில், 2.51 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், கையாளப்பட்ட சரக்குகளை விட, 13.17 சதவீதம் (2.22 கோடி டன்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கோல்கட்டாவில், இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன. கணக்கீட்டு காலத்தில், இவை கையாண்ட சரக்குகளின் அளவு, 7.94 சதவீதம் குறைந்து, 4.32 கோடி டன்னிலிருந்து 3.98 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்டம் துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 3.82 சதவீதம் குறைந்து, 1.16 கோடி டன்னிலிருந்து 1.11 கோடி டன்னாகவும், ஹால்டியா டாக் காம்பளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 9.45 சதவீதம் குறைந்து, 3.16 கோடி டன்னிலிருந்து 2.86 கோடி டன்னாகவும் சரிவடைந்துள்ளது.மும்பை துறைமுகம்மும்பை துறைமுகம், கையாண்ட சரக்குகள், 0.68 சதவீதம் உயர்ந்து, 4.99 கோடி டன்னிலிருந்து 5.02 கோடி டன்னாகவும், ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்குகள், 2.86 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5.86 கோடி டன்னிலிருந்து 6.02 கோடி டன்னாகவும் உயர்ந்துள்ளது.கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்குகள், 0.71 சதவீதம் உயர்ந்து, 7.49 கோடி டன்னிலிருந்து 7.54 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்குகள், 1.58 சதவீதம் குறைந்து, 5.06 கோடி டன்னிலிருந்து 4.98 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்குகள், 1.16 சதவீதம் உயர்ந்து, 6.15 கோடி டன்னிலிருந்து 6.22 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.மங்களூர் துறைமுகம் இதே காலத்தில், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்குகள், 13.67 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1.60 கோடி டன்னிலிருந்து 1.82 கோடி டன்னாகவும், புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்குகள், 3.10 சதவீதம் உயர்ந்து, 2.89 கோடி டன்னிலிருந்து 2.98 கோடி டன்னாகவும் உயர்ந்துள்ளது.அதேசமயம், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 20 சதவீதம் சரிவடைந்து, 4.41 கோடி டன்னிலிருந்து 3.52 கோடி டன்னாக குறைந்துள்ளது என, இந்தியத் துறைமுகங்கள் சங்கத்தின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)