பதிவு செய்த நாள்
09 மார்2012
00:07
புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இந்தியத் துறைமுகங்களில், கையாளப்பட்ட சரக்குகள், 51 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், கையாளப்பட்ட சரக்குகளின் அளவை விட, 0.74 சதவீதம் (51.46 கோடி டன்) குறைவாகும்.இரும்புத் தாதுகணக்கீட்டு காலத்தில், இந்தியத் துறைமுகங்களில் கையாளப்பட்ட இரும்புத் தாது, 28.61 சதவீதம் சரிவடைந்து, 7.88 கோடி டன்னிலிருந்து 5.62 கோடி டன்னாக குறைந்துள்ளது. இதுதவிர, கையாளப்பட்ட உர வகைகள், 1.44 சதவீதம் குறைந்து, 1.20 கோடி டன்னிலிருந்து 1.18 கோடி டன்னாகவும்,"கோக்கிங் கோல்' எனப்படும் சிறப்பு வகை நிலக்கரி, 0.38 சதவீதம் குறைந்து, 2.61 கோடி டன்னிலிருந்து 2.59 கோடி டன்னாகவும் குறைந்துள்ளது. மேற்கண்ட பொருள்களின் அளவு குறைந்ததே, ஒட்டுமொத்த அளவில் துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள் குறைந்ததற்கு காரணம் என, இந்தியத் துறைமுகங்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எண்ணூர் துறைமுகம்உள்நாட்டில், ஒட்டு மொத்த அளவில், மிகப்பெரிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது என்றாலும், கணக்கீட்டு காலத்தில், எண்ணூர் துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 46.95 சதவீதம் வளர்ச்சிகண்டு, 92.41 லட்சம் டன்னிலிருந்து 1.36 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 7.84 சதவீதம் குறைந்து, 5.57 கோடி டன்னிலிருந்து 5.13 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில், 2.51 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், கையாளப்பட்ட சரக்குகளை விட, 13.17 சதவீதம் (2.22 கோடி டன்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கோல்கட்டாவில், இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன. கணக்கீட்டு காலத்தில், இவை கையாண்ட சரக்குகளின் அளவு, 7.94 சதவீதம் குறைந்து, 4.32 கோடி டன்னிலிருந்து 3.98 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்டம் துறைமுகம், கையாண்ட சரக்குகளின் அளவு, 3.82 சதவீதம் குறைந்து, 1.16 கோடி டன்னிலிருந்து 1.11 கோடி டன்னாகவும், ஹால்டியா டாக் காம்பளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 9.45 சதவீதம் குறைந்து, 3.16 கோடி டன்னிலிருந்து 2.86 கோடி டன்னாகவும் சரிவடைந்துள்ளது.மும்பை துறைமுகம்மும்பை துறைமுகம், கையாண்ட சரக்குகள், 0.68 சதவீதம் உயர்ந்து, 4.99 கோடி டன்னிலிருந்து 5.02 கோடி டன்னாகவும், ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்குகள், 2.86 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5.86 கோடி டன்னிலிருந்து 6.02 கோடி டன்னாகவும் உயர்ந்துள்ளது.கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்குகள், 0.71 சதவீதம் உயர்ந்து, 7.49 கோடி டன்னிலிருந்து 7.54 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்குகள், 1.58 சதவீதம் குறைந்து, 5.06 கோடி டன்னிலிருந்து 4.98 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்குகள், 1.16 சதவீதம் உயர்ந்து, 6.15 கோடி டன்னிலிருந்து 6.22 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.மங்களூர் துறைமுகம் இதே காலத்தில், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்குகள், 13.67 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1.60 கோடி டன்னிலிருந்து 1.82 கோடி டன்னாகவும், புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்குகள், 3.10 சதவீதம் உயர்ந்து, 2.89 கோடி டன்னிலிருந்து 2.98 கோடி டன்னாகவும் உயர்ந்துள்ளது.அதேசமயம், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 20 சதவீதம் சரிவடைந்து, 4.41 கோடி டன்னிலிருந்து 3.52 கோடி டன்னாக குறைந்துள்ளது என, இந்தியத் துறைமுகங்கள் சங்கத்தின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|