பதிவு செய்த நாள்
09 மார்2012
09:58
மும்பை : மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி இருக்கிறது. ஐரோப்பா, ஆசிய பங்குசந்தைகளின் வீழ்ச்சி மற்றும் ஐந்துமாநில தேர்தல் முடிவு போன்ற காரணங்களால் இந்தவாரம் தொடங்கியதில் இருந்து கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தைகள் இன்று ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கிய போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 310.70 புள்ளிகள் உயர்ந்து 17,456.22-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 78.65 புள்ளிகள் உயர்ந்து 5299.10 ஆகவும் காணப்பட்டது. இதேபோல் ஹாங்காங் மற்றும் ஜப்பான் பங்குசந்தைகளும் உயர்வுடன் தொடங்கியிருக்கிறது.
கடந்த சில தினங்களாகவே சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள், இன்று 300 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|