பதிவு செய்த நாள்
09 மார்2012
12:47
மும்பை : கட்டுமானம், இன்ஜினியரிங், தொழில்நுட்பம் என்று பல்வேறு தொழில்கள் செய்து வரும் நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான எல் அண்ட் டி எனப்படும் லார்சன் டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுநாள் வரை அந்த நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் ஒருவரே கவனித்து வந்தார். இப்போது இதில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிற்கு கே.வெங்கட்ராமன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிர்வாகத்தின் தலைவர் பதவியை வகித்த வந்த ஏ.எம்.நாயக், செயற்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் 5 ஆண்டு காலத்திற்கு அவர் இந்த பொறுப்பில் இருப்பார். இந்த நிர்வாக மாற்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|