பதிவு செய்த நாள்
10 மார்2012
00:00
புதுடில்லி: வருமான வரி விலக்கு வரம்பை 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என யஷ்வந்த்சின்கா தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.வரும் பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ள நேரடி வரி திட்டத்தை ஆய்வு செய்த இக்குழு, அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, பார்லிமென்ட் சபாநாயகர் மீரா குமாரிடம் நேற்று அளித்தது.இந்த அறிக்கையில், வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும், வரி சேமிப்பு திட்டங்களுக்கான முதலீட்டு வரம்பை 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், செல்வ வரி வரம்பை 5 லட்ச ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், பங்கு பரிவர்த்தனை வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|