பதிவு செய்த நாள்
10 மார்2012
00:02
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பரஸ்பர வர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என, இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் என்.வர்கீஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:இரு நாடுகளுக்கு இடையே கல்வி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர நல்லுறவு வலுவடைந்து வருகிறது. தற்போது, இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்தின் மதிப்பு, 2,100 கோடி டாலராக (1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய்) உள்ளது.இதை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு மடங்காக அதாவது, 4,200 கோடி டாலராக (2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியா ஐந்தாவது வர்த்தக நாடாக உருவெடுக்கும்.ஆஸ்திரேலிய வங்கிகள், இந்திய நிதித் துறையில் கால் பதிக்க, ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்றுள்ளன. ஆனால், அவை சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடாமல், வர்த்தகம் சார்ந்த நிதிச் சேவையில் ஈடுபடும். இவ்வாறு பீட்டர் என்.வர்கீஸ் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|