பதிவு செய்த நாள்
10 மார்2012
00:02
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3 லட்சத்து 48 ஆயிரத்து 702 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான தொகையை விட, 14.6 சதவீதம் (3 லட்சத்து 4 ஆயிரத்து 212 கோடி ரூபாய்) அதிகமாகும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சுங்க வரி வசூல், 12 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 588 கோடியிலிருந்து, 1 லட்சத்து 36 ஆயிரத்து 214 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல், உற்பத்தி வரி வசூல், 6.2 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 22 ஆயிரத்து 315 கோடியிலிருந்து, 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 கோடி ரூபாயாகவும், சேவை வரி வசூல், 36.9 சதவீதம் அதிகரித்து, 60 ஆயிரத்து 309 கோடியிலிருந்து, 82 ஆயிரத்து 562 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.சென்ற பிப்ரவரியில், மறைமுக வரி வசூல், 31 ஆயிரத்து 469 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், வசூலான தொகையை விட, 9.6 சதவீதம் (28 ஆயிரத்து 705 கோடி ரூபாய்) அதிகமாகும்.கணக்கீட்டு மாதத்தில், சுங்க வரி வசூல், 5.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11 ஆயிரத்து 479 கோடியிலிருந்து, 12 ஆயிரத்து 151 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மத்திய உற்பத்தி வரி வசூல், 1.3 சதவீதம் உயர்ந்து, 12 ஆயிரத்து 38 கோடியிலிருந்து, 12 ஆயிரத்து 196 கோடி ரூபாயாகவும், சேவை வரி வசூல், 37.3 சதவீதம் அதிகரித்து, 5,188 கோடியிலிருந்து, 7,122 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நடப்பு 2011-12ம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மறைமுக இலக்கில், இதுவரை 88.7 சதவீதம் எட்டப்பட்டிருக்கும் என, நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|