வருமான வரி வரம்பை ரூ.3லட்சமாக உயர்த்த பரிந்துரை வருமான வரி வரம்பை ரூ.3லட்சமாக உயர்த்த பரிந்துரை ... என்.எல்.சி.க்கு புதிய தலைவர் என்.எல்.சி.க்கு புதிய தலைவர் ...
மறைமுக வரி வசூல் ரூ.3.48 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2012
00:02

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3 லட்சத்து 48 ஆயிரத்து 702 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான தொகையை விட, 14.6 சதவீதம் (3 லட்சத்து 4 ஆயிரத்து 212 கோடி ரூபாய்) அதிகமாகும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சுங்க வரி வசூல், 12 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 588 கோடியிலிருந்து, 1 லட்சத்து 36 ஆயிரத்து 214 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல், உற்பத்தி வரி வசூல், 6.2 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 22 ஆயிரத்து 315 கோடியிலிருந்து, 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 கோடி ரூபாயாகவும், சேவை வரி வசூல், 36.9 சதவீதம் அதிகரித்து, 60 ஆயிரத்து 309 கோடியிலிருந்து, 82 ஆயிரத்து 562 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.சென்ற பிப்ரவரியில், மறைமுக வரி வசூல், 31 ஆயிரத்து 469 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், வசூலான தொகையை விட, 9.6 சதவீதம் (28 ஆயிரத்து 705 கோடி ரூபாய்) அதிகமாகும்.கணக்கீட்டு மாதத்தில், சுங்க வரி வசூல், 5.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11 ஆயிரத்து 479 கோடியிலிருந்து, 12 ஆயிரத்து 151 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மத்திய உற்பத்தி வரி வசூல், 1.3 சதவீதம் உயர்ந்து, 12 ஆயிரத்து 38 கோடியிலிருந்து, 12 ஆயிரத்து 196 கோடி ரூபாயாகவும், சேவை வரி வசூல், 37.3 சதவீதம் அதிகரித்து, 5,188 கோடியிலிருந்து, 7,122 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நடப்பு 2011-12ம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மறைமுக இலக்கில், இதுவரை 88.7 சதவீதம் எட்டப்பட்டிருக்கும் என, நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)