பதிவு செய்த நாள்
10 மார்2012
00:06
புதுடில்லி: பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து, முடிவு எடுப்பதற்காக நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என மத்திய ஜவுளித் துறை செயலர் ரீட்டா மேனன் திட்டவட்டமாக தெரிவித்தார்.உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில், சென்ற 5ம் தேதி பருத்தி ஏற்றுமதிக்கு, அயல்நாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.எப்.டி.,) தடை விதித்தது. இதற்கு, ஜவுளித் துறை வரவேற்பு தெரிவித்தது. ஆனால், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து, தம்மை வர்த்தக அமைச்சகம் கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து, அவர் பிரதமரிடமும் முறையிட்டார். இதையடுத்து, பிரதமர் உத்தரவின்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து, அமைச்சகங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல், கூட்டம் முடிவடைந்தது.அதேசமயம், இது தொடர்பான பேச்சுவார்த்தை இன்றும் நடைபெறும் என வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய ஜவுளி துறை செயலர் ரீட்டா மேனன், பருத்தி ஏற்றுமதி மீதான தடை நீடிக்கும் என்று தெரிவித்தார். இதனிடையே, நடப்பு மார்ச் மாதம் 4ம் தேதி வரை, பருத்தி ஏற்றுமதி செய்ய பதிவு செய்த நிறுவனங்கள், தடையின்றி பருத்தியை ஏற்றுமதி செய்யலாம் என, டீ.ஜி.எப்.டி., தெரிவித்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|