பதிவு செய்த நாள்
10 மார்2012
00:07
மும்பை: ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.,) 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வங்கிகளிடம், 48 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில் குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியிடம் ரொக்க இருப்பாக வைக்க வேண்டும். இது, 5.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதில், 0.75 சதவீதம் குறைத்ததையடுத்து, 4.75 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ரொக்க இருப்பு விகித குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நிறுவனங்கள், வரும் 15ம் தேதிக்குள் முன்கூட்டிய வரியை செலுத்த வேண்டும். இதனால், வங்கிகளிடமிருந்து, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஆதாரம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு குறையும்பட்சத்தில், வங்கிகள் கடன் வழங்குவதற்கு, போதிய அளவிற்கு நிதி இருக்காது என்பதை கருத்தில் கொண்டு தான், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.சென்ற ஜனவரியில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை, 0.50 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, வங்கிகளுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஆதாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.ரிசர்வ் வங்கி, வரும் 15ம் தேதி, அறிவிக்க உள்ள அதன் நிதி கொள்கையில், ரொக்க இருப்பு விகிதத்தை, 0.50 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே குறைத்திருப்பது, சந்தை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளிக்கிழமையன்று, பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு, ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வரும் திங்களன்று நடை பெறும் பங்கு வர்த்தகத்தில், இதன் தாக்கம் எதிரொலிக்கும் என, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில் குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியிடம் ரொக்க இருப்பாக வைக்க வேண்டும். இது, 5.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதில், 0.75 சதவீதம் குறைக்கப்பட்டதையடுத்து, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 4.75 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|