இந்திய தொழிலக கூட்டமைப்பின்தமிழக பிரிவிற்கு புதிய தலைவர்  இந்திய தொழிலக கூட்டமைப்பின்தமிழக பிரிவிற்கு புதிய தலைவர் ... நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில்...நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாக குறைந்தது நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில்...நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாக ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 0.75 சதவீதம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2012
00:07

மும்பை: ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.,) 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வங்கிகளிடம், 48 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில் குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியிடம் ரொக்க இருப்பாக வைக்க வேண்டும். இது, 5.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதில், 0.75 சதவீதம் குறைத்ததையடுத்து, 4.75 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ரொக்க இருப்பு விகித குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நிறுவனங்கள், வரும் 15ம் தேதிக்குள் முன்கூட்டிய வரியை செலுத்த வேண்டும். இதனால், வங்கிகளிடமிருந்து, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஆதாரம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு குறையும்பட்சத்தில், வங்கிகள் கடன் வழங்குவதற்கு, போதிய அளவிற்கு நிதி இருக்காது என்பதை கருத்தில் கொண்டு தான், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.சென்ற ஜனவரியில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை, 0.50 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, வங்கிகளுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஆதாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.ரிசர்வ் வங்கி, வரும் 15ம் தேதி, அறிவிக்க உள்ள அதன் நிதி கொள்கையில், ரொக்க இருப்பு விகிதத்தை, 0.50 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே குறைத்திருப்பது, சந்தை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளிக்கிழமையன்று, பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு, ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வரும் திங்களன்று நடை பெறும் பங்கு வர்த்தகத்தில், இதன் தாக்கம் எதிரொலிக்கும் என, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில் குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியிடம் ரொக்க இருப்பாக வைக்க வேண்டும். இது, 5.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதில், 0.75 சதவீதம் குறைக்கப்பட்டதையடுத்து, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 4.75 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)