பதிவு செய்த நாள்
10 மார்2012
00:09
மும்பை :நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சிறப்பாக இருந்தது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் சீனாவின் பணவீக்கம் குறைந்துள்ளது போன்ற செய்திகளால், உலக அளவில் பங்கு வியாபாரம் சூடுபிடித்தது. இது தவிர, கிரீஸ் நாடு, அதன் கடன் பத்திர பிரச்னைக்கு சுமுகமான முறையில் தீர்வு கண்டதையடுத்து, அமெரிக்கா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 1 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், வங்கி, பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், நுகர் பொருட்கள் உள்ளிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 357.72 புள்ளிகள் அதிகரித்து, 17,503.24 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,531.62 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,325.82 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 113.10 புள்ளிகள் உயர்ந்து, 5,333.55 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,342.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,291.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|