பதிவு செய்த நாள்
11 மார்2012
10:06
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள், பிரேசில் நாட்டில் தயாராகி வருகின்றன. ஆல்ஸ்டாம் நிறுவனம் இதற்கான பணிகளை செய்து வருகிறது.சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, பூமிக்கு மேல் ரயில் பாதைகள் அமைப்பது, பூமிக்கடியில் சுரங்கப்பாதை தோண்டி ரயில் பாதைகள் அமைப்பது ஆகிய பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில், மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகளும் பிரேசில் நாட்டில் நடந்து வருகின்றன.
டில்லி, பெங்களூரு மெட்ரோ ரயில்களுக்கு ரயில் பெட்டிகளை தயாரித்து தந்த ஆல்ஸ்டாம் நிறுவனம், சென்னை மெட்ரோ ரயிலுக்கும் ரயில் பெட்டிகளை தயாரித்துக் கொடுக்கிறது. இதற்காக, 1,470 கோடி ரூபாயிலான ஒப்பந்தத்தை, ஆல்ஸ்டாம் நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்துள்ளது.ஆல்ஸ்டாம் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலையை, பிரேசில் நாட்டில் அமைத்துள்ளது. அங்கு, சென்னை மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை தயார் செய்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, 48 ரயில்கள் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலிலும், நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். மொத்தம், 168 பெட்டிகள் இதற்காக தயார் செய்யப்படுகின்றன.
தானியங்கி கதவுகள்:பூமிக்கு மேலும், பூமிக்கு அடியிலும் மெட்ரோ ரயில் செல்வதால், முழுவதும் "ஏசி' ரயிலாகவே வடிவமைக்கப்படுகிறது. இதன் கதவுகள், அதுவே திறந்து மூடும் தானியங்கி முறையில் இருக்கும். 25 கிலோவாட் மின்சாரத்தில், 80 கி.மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் செல்லும். ரயில் பெட்டிகள் தயாரிப்பு முடிந்து, முதல் பெட்டி இறக்குமதி, 2012 டிசம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|