பதிவு செய்த நாள்
11 மார்2012
16:21
புதுடில்லி: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட ஆலோசனைக்கு பின்னர் பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில், கடந்த 5ம் தேதி பருத்தி ஏற்றுமதிக்கு, அயல்நாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.எப்.டி.,) தடை விதித்தது. இதற்கு, ஜவுளித் துறை வரவேற்பு தெரிவித்தது. ஆனால், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து, தம்மை வர்த்தக அமைச்சகம் கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து, அவர் பிரதமரிடமும் முறையிட்டார். இதையடுத்து, பிரதமர் உத்தரவின்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து, அமைச்சகங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிற்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான முறையான அறிக்கை நாளை வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|