சென்னை-பாங்காக் இடையே ஏர் ஏசியா நேரடி விமான சேவைசென்னை-பாங்காக் இடையே ஏர் ஏசியா நேரடி விமான சேவை ... சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ... ...
வர்த்தகம் » ஜவுளி
பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2012
16:21

புதுடில்லி: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட ஆலோசனைக்கு பின்னர் பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில், கடந்த 5ம் தேதி பருத்தி ஏற்றுமதிக்கு, அயல்நாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.எப்.டி.,) தடை விதித்தது. இதற்கு, ஜவுளித் துறை வரவேற்பு தெரிவித்தது. ஆனால், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து, தம்மை வர்த்தக அமைச்சகம் கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து, அவர் பிரதமரிடமும் முறையிட்டார். இதையடுத்து, பிரதமர் உத்தரவின்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து, அமைச்சகங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிற்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான முறையான அறிக்கை நாளை வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)