பதிவு செய்த நாள்
11 மார்2012
23:55
மும்பை:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, தனது நிதி ஆதாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, மிக குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.இதன்படி, 7-14 நாட்களில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி, 270 சதவீதம் அதிகரித்து, 2.5 சதவீதத்திலிருந்து, 9 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இது தவிர, 15-45 நாட்களுக்கான டெபாசிட்டுகளுக்கான வட்டி, 80 சதவீதம் அதிகரித்து, 5 சதவீதத் திலிருந்து 9 சதவீதமாகவும், 46-90 நாட்கள் டெபாசிட்டுகளுக்கான வட்டி, 5.25 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்புதிய வட்டி விகிதம், இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, இவ்வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, குறுகிய கால டெபாசிட்டிற்கு வட்டி விகி தங்களை உயர்த்தியுள்ளது என்பது, வங்கிகளுக்கான நிதி ஆதாரம் குறைந்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|