பதிவு செய்த நாள்
11 மார்2012
23:56
சென்னை:விஸ்வகர்மா பிராப்பர்டீஸ் நிறுவனம், ஸ்கைபார்க் என்ற சர்வதேச தரத்திலான குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கர் கூறியதாவது:அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய, குடியிருப்புகளையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.
வெளிப்படைத்தன்மை மற்றும் குடியிப்பு திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றி தருவதே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும்.இந்த வகையில், சிங்கப்பூர் கட்டட ஸ்டைலில் அமைய உள்ள 15 மாடிகள் கொண்ட, இப்புதிய ஸ்கைபார்க் குடியிருப்பு திட்டம் 24 மாதங்களில் நிறைவேற்றி தரப்பட உள்ளது. இக்குடியிருப்பு திட்டத்தில் அமைய உள்ள இரண்டு கோபுரங்களுக்கு இடையிலும் பாலம் அமைக்கப்படுவது இதன் மற்றொரு தனிச்சிறப்பு.
இதில், இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகள், 1064/1120 சதுர அடியிலும் (100 வீடுகள்), மூன்று படுக்கை அறை கொண்ட வீடுகள், 1371/1437/1377/2328/2323 சதுர அடியிலும் (101 வீடுகள்) அமைய உள்ளன. மேலும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடம், பன்முக பயன் பாட்டு அரங்கம், நூலகம் உள்ளிட்ட பல வசதிகள் இப்புதிய குடியிருப்பில் ஏற்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு சங்கர் கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|