சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ... ... ஸ்பீடு போஸ்ட், மணி ஆர்டர் கட்டணம் விரைவில் உயர்கிறது ஸ்பீடு போஸ்ட், மணி ஆர்டர் கட்டணம் விரைவில் உயர்கிறது ...
வர்த்தகம் » ஜவுளி
விசைத்தறிக்கும் ஒருநாள் மின் விடுமுறை:கூலித் தொழிலாளர்கள் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2012
23:58

தமிழகத்தில், தொழிற்சாலைகளை தொடர்ந்து, மாவட்டத்தில் இயங்கி வரும் விசைத்தறிகளுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் மின்சார விடுமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், இத்துறை சார்ந்த கூலித்தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்படுகின்றனர்.மாநிலத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலை களுக்கான மின்சார வார விடுமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் விசைத்தறி தொழிலுக்கும் வாரத்துக்கு, ஒரு நாள் மின்சார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெசவாளர் குடும்பங்கள்:இதற்கான உத்தரவை,அனைத்து விசைத்தறி உரிமையாளர்களுக்கும், மின் வாரிய ஊழியர்கள் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நரசிங்கபுரம், பள்ளிப்பட்டு, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், ராஜாநகரம், அத்திமாஞ்சேரிபேட்டை, சொரக்காய்ப்பேட்டை, பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில் நெசவு. இம்மாவட்டத்தில் மட்டும், 8,394 விசைத் தறிகள் உள்ளன. இதன் மூலம், 5,790 விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.நெசவாளர்கள் தொடர்ந்து விசைத்தறிகளை இயக்கினாலே, ஒரு நாளுக்கு, 150 ரூபாய் தான் கூலி கிடைக்கும். இந்நிலையில் தினமும் அதிகபட்சம், 8 மணி நேரம் மின்தடை உள்ளது. இது போதாதென்று, மின்சார வார விடுமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியில் செவ்வாய் கிழமை, பொதட்டூர்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் பகுதியில் சனிக்கிழமை என விசைத்தறிகளுக்கு மின்சார விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
வருமானம்:இதை விசைத்தறி உரிமையாளர்கள் கடைபிடிக்கின்றனரா என, அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்யவும் உள்ளனர். ஒருநாள் வருமானம் முற்றிலும் குறைந்ததால், விசைத்தறி நெசவாளர்கள் கஞ்சி குடிக்கும் அவலத்தில் உள்ளனர்.இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத மின்வாரிய இளநிலை பொறியாளர் ஒருவர் கூறும்போது, "அரசின் உத்தரவை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அதன்படி, விசைத்தறிகளுக்கும், வாரத்தில் ஒருநாள் மின்சார விடுமுறை அறிவிப்பு உத்தரவை, அதன் உரிமையாளர்களுக்கு வழங்கி உள்ளோம்' என்றார்.
- என்.ஆனந்தன் -

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)