பதிவு செய்த நாள்
11 மார்2012
23:59
சேலம் :கோடை காலம் நெருங்கியதை முன்னிட்டு, சாத்துக்குடி பழங்களின் விலை அதிகரித்து வருகிறது.கடந்த ஆறு மாதமாக, சாத்துக்குடி பழங்களின் விலை மிகவும் குறைவாகவே இருந்தது. ஜூஸ் போட்டு குடிக்கும் சாத்துக்குடி பழங்கள் ஒரு கிலோ, 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்டன. தரமான பழங்கள் ஒரு கிலோ, 17 முதல் 20 ரூபாய் வரை விலை போயின.
பனிக் காலத்தில், சாத்துக்குடி பழங்களை யாரும் சீண்டவில்லை. ஆனால், இன்றோ, அடிக்கும் வெயிலுக்கு, சாத்துக்குடி ஜூஸ் சாப்பிட்டு விட்டு தான் பலர் வெளியில் செல்கின்றனர். அதனால், பழங்களின் விலையும் ஏறிவிட்டது. மார்க்கெட் பகுதியில் ஒரு கிலோ, 32 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், பெரிய கடைகளில் சாத்துக்குடியின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும்.
சேலம் பழ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:ஆறு மாதமாக சாத்துக்குடி வரத்து, தங்கு தடையின்றி வந்துள்ளது. அப்போது குறைந்திருந்த சாத்துக்குடியின் விலை, இன்று ஒரு கிலோ, 32 ரூபாய் என உயர்ந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மேலும் விலை உயரும். ஆந்திர மாநிலத்தில் இருந்து சாத்துக்குடி பழங்கள் வருகின்றன.தினமும், 30 டன் பழம், சேலம் நகரத்துக்கு வருகிறது. இங்கிருந்து அருகில் உள்ள மற்ற சிறு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. சாத்துக்குடி பழங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவை. சோர்வாக இருப்பவர்களுக்கு இந்த பழம் மிகவும் உகந்தது. தமிழகத்தில், சாத்துக்குடி பழங்களின் விளைச்சல் மிகவும் குறைவு.
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓரளவு பழங்கள் வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் அதிகளவு விளைச்சல் கண்டுள்ளதால், டன் கணக்கில் சாத்துக்குடி பழங்கள் லாரிகள் மூலம் வருகின்றன. ஜூஸ் போட பயன்படும் சாத்துக்குடி பழங்கள், 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|