சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ... ... ஸ்பீடு போஸ்ட், மணி ஆர்டர் கட்டணம் விரைவில் உயர்கிறது ஸ்பீடு போஸ்ட், மணி ஆர்டர் கட்டணம் விரைவில் உயர்கிறது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கோடையால் சாத்துக்குடி விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2012
23:59

சேலம் :கோடை காலம் நெருங்கியதை முன்னிட்டு, சாத்துக்குடி பழங்களின் விலை அதிகரித்து வருகிறது.கடந்த ஆறு மாதமாக, சாத்துக்குடி பழங்களின் விலை மிகவும் குறைவாகவே இருந்தது. ஜூஸ் போட்டு குடிக்கும் சாத்துக்குடி பழங்கள் ஒரு கிலோ, 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்டன. தரமான பழங்கள் ஒரு கிலோ, 17 முதல் 20 ரூபாய் வரை விலை போயின.
பனிக் காலத்தில், சாத்துக்குடி பழங்களை யாரும் சீண்டவில்லை. ஆனால், இன்றோ, அடிக்கும் வெயிலுக்கு, சாத்துக்குடி ஜூஸ் சாப்பிட்டு விட்டு தான் பலர் வெளியில் செல்கின்றனர். அதனால், பழங்களின் விலையும் ஏறிவிட்டது. மார்க்கெட் பகுதியில் ஒரு கிலோ, 32 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், பெரிய கடைகளில் சாத்துக்குடியின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும்.
சேலம் பழ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:ஆறு மாதமாக சாத்துக்குடி வரத்து, தங்கு தடையின்றி வந்துள்ளது. அப்போது குறைந்திருந்த சாத்துக்குடியின் விலை, இன்று ஒரு கிலோ, 32 ரூபாய் என உயர்ந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மேலும் விலை உயரும். ஆந்திர மாநிலத்தில் இருந்து சாத்துக்குடி பழங்கள் வருகின்றன.தினமும், 30 டன் பழம், சேலம் நகரத்துக்கு வருகிறது. இங்கிருந்து அருகில் உள்ள மற்ற சிறு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. சாத்துக்குடி பழங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவை. சோர்வாக இருப்பவர்களுக்கு இந்த பழம் மிகவும் உகந்தது. தமிழகத்தில், சாத்துக்குடி பழங்களின் விளைச்சல் மிகவும் குறைவு.
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓரளவு பழங்கள் வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் அதிகளவு விளைச்சல் கண்டுள்ளதால், டன் கணக்கில் சாத்துக்குடி பழங்கள் லாரிகள் மூலம் வருகின்றன. ஜூஸ் போட பயன்படும் சாத்துக்குடி பழங்கள், 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)