பதிவு செய்த நாள்
14 மார்2012
10:29
தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலம், கடந்த 10 நாட்களில், 27 ஆயிரம் குடும்ப அட்டைகள், புதுப்பிக்கப்பட்டு உள்ளன. 10 நாட்களில்...
ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைக்கான கால நீட்டிப்பு பணி, கடந்த 29ம் தேதியுடன் முடிந்த நிலையில், விடுபட்டோர், இணையம் மூலம் மார்ச் 31ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 10 நாட்களில், 26 ஆயிரத்து 859 கார்டுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில், எந்த விதமான பொருட்களும் வாங்கத் தகுதியில்லாத, 11,151 கவுரவ அட்டைகள்; 9,966 பச்சை நிற அட்டைகள்; 4,439 சர்க்கரைக்கான வெள்ளை அட்டைகள்; அரசு பணியில் உள்ளோருக்கான, 333 நீல நிற அட்டைகள்; தத்காலில் பெற்ற, 970 மஞ்சள் நிற அட்டைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில், கவுரவ அட்டைகள் பெரும்பாலும், வெளிநாடுகளில் இருந்தே புதுப்பிக்கப்பட்டுள்ளன.
காரணங்கள் பல விதம் காலதாமதமான புதுப்பித்தலுக்கு, பலரும் பல காரணங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உடல்நலக் குறைவால், மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக, 2,000 பேரும்; மத ரீதியான கோவில் புனித யாத்திரை என, 450 பேரும்; வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிப்பதாக, 11,500 பேரும் கூறியுள்ளனர். சர்க்கரை அட்டைகளை புதுப்பித்து உள்ளவர்களில், 674 குடும்பத் தலைவர்கள், தங்களால் கடைகளுக்கு நேரில் வர முடியாது என்றும்; தங்களது உறவினர், நண்பர் அல்லது வீட்டு வேலைக்காரர்களை, பொருட்களை வாங்க அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|