"சென்செக்ஸ்' 226 புள்ளிகள் அதிகரிப்பு"சென்செக்ஸ்' 226 புள்ளிகள் அதிகரிப்பு ... 2012-2013ம் ஆண்டிற்கான  ரயில்வே பட்ஜெட் தாக்கல் 2012-2013ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் ...
இணையம் மூலம் 27,000 குடும்ப அட்டைகள் புதுப்பிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
10:29

தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலம், கடந்த 10 நாட்களில், 27 ஆயிரம் குடும்ப அட்டைகள், புதுப்பிக்கப்பட்டு உள்ளன. 10 நாட்களில்...
ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைக்கான கால நீட்டிப்பு பணி, கடந்த 29ம் தேதியுடன் முடிந்த நிலையில், விடுபட்டோர், இணையம் மூலம் மார்ச் 31ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 10 நாட்களில், 26 ஆயிரத்து 859 கார்டுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில், எந்த விதமான பொருட்களும் வாங்கத் தகுதியில்லாத, 11,151 கவுரவ அட்டைகள்; 9,966 பச்சை நிற அட்டைகள்; 4,439 சர்க்கரைக்கான வெள்ளை அட்டைகள்; அரசு பணியில் உள்ளோருக்கான, 333 நீல நிற அட்டைகள்; தத்காலில் பெற்ற, 970 மஞ்சள் நிற அட்டைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில், கவுரவ அட்டைகள் பெரும்பாலும், வெளிநாடுகளில் இருந்தே புதுப்பிக்கப்பட்டுள்ளன.
காரணங்கள் பல விதம் காலதாமதமான புதுப்பித்தலுக்கு, பலரும் பல காரணங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உடல்நலக் குறைவால், மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக, 2,000 பேரும்; மத ரீதியான கோவில் புனித யாத்திரை என, 450 பேரும்; வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிப்பதாக, 11,500 பேரும் கூறியுள்ளனர். சர்க்கரை அட்டைகளை புதுப்பித்து உள்ளவர்களில், 674 குடும்பத் தலைவர்கள், தங்களால் கடைகளுக்கு நேரில் வர முடியாது என்றும்; தங்களது உறவினர், நண்பர் அல்லது வீட்டு வேலைக்காரர்களை, பொருட்களை வாங்க அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)