பதிவு செய்த நாள்
14 மார்2012
12:47
புதுடில்லி : 2012-2013 ம் ஆண்டிற்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும். பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து திரிவேதி பட்ஜெட்டை வாசிக்க துவங்கினார். அவர் பேசுகையில், ஆளில்லா ரயில் கிராசிங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அகற்றப்படும்; உயர்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்; 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கென ரூ.7.35 லட்சம் கோடி ரயில்வே புதிய திட்டங்களுக்காக முதலீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது அனில் ககோட்கர் ரயில்வே பாதுகாப்பு துறைக்கு தலைமை வகிப்பார்; வட கிழக்கு-காஷ்மீரை இணைக்கும் அவரச இணைப்புக்கள் ஏற்படுத்தப்படும்; சாம் பிட்ரோடா, ரயில்வே நவீனமயமாக்கல் கமிட்டிற்கு தலைமை வகிப்பார்; ரூ.1லட்சம் கோடி முதலீட்டில் 470 ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரயில் நிலையங்கள், பாலங்கள், ரயில்வே தடங்களில் தொலைதொடர்புகள் மேம்படுத்தப்படும்; அரசிடம் இருந்து கூடுதல் உதவித்தொகை தேவைப்படுகிறது; ஆண்டுக்கு ரூ.60,000 கோடி முதலீடு செய்யப்படும்; புறநகர் பகுதிகள் ரயில்வே இணைப்பு வழங்கப்படும்; 12வது ஐந்தாண்டு திட்டத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரூ.16,842 கோடி ஒதுக்கப்படும்; அரசின் உள்கட்டுமானத்தில் இருந்து ரயில்வேவிற்கு குறைந்த பட்சம் 10 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. 11250 புதிய ரயில்வே பாலங்கள் நாடு முழுவதும் கட்டப்படும்; நெரிசலை குறைக்க புதிய பாதைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|