பதிவு செய்த நாள்
14 மார்2012
13:48
புதுடில்லி : சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2013ல் நிறைவடையும் என மத்திய ரயில்வே பட்ஜெட்டில் திரிவேதி உறுதி அளித்துள்ளார். மேலும், ரயில் நிலையங்களை மேம்படுத்த புதிதாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; 160 கி.மீ.,களுக்கு ரயில்களின் வேகங்கள் அதிகரிக்கப்படும்; 2013ல் 6500 கி.மீ.,களுக்கு மின்சார ரயில் பாதைகள் அமைக்க திட்டம்; ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் கேரளா மற்றும் பாலக்காட்டில் அமைக்கப்படும்; கோல்கட்டாவில் புதிய மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அகர்தலா-வங்கதேசம் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் உள்ளது; மாற்று திறனாளிகளுக்கு 2100 பெட்டிகள்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்த கழிவறைகள் அமைக்கப்படும்; கழிவறைகள் சுத்தமான முறையில் பராமரிக்க புதிய திட்டம்; இதற்காக ரூ.1112 கோடி ஒதுக்கப்படும்; உலகத்தரம் வாய்ந்த முதல்தர ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|