பதிவு செய்த நாள்
14 மார்2012
14:20
புதுடில்லி : 2012-2013 ம் ஆண்டிற்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று தாக்கல் செய்தார்.10 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் முதல்முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அப்போது, புதிய சாதாரண ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 2 பைசா உயர்த்தப்படும்; இலவச ரயில் பாஸ் கட்டணம் 50 கி.மீ.,ல் இருந்து 150 கி.மீ., ஆக அதிகரிக்கப்படும்;ஸ்லீப்பருக்கு கி.மீ.,க்கு 5 பைசா உயர்த்தப்படும்; எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3 பைசா உயர்த்தப்படும்; பிளாட்பார்ம் கட்டணம் ரூ.5 ஆக உயர்த்தப்படும்; அனைத்து தரப்பிலும் ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில் வடிவமைப்பு மையங்கள் விரைவில் அமைக்கப்படும்; ரயில்வே துறைக்கு நடப்பு நிதியாண்டின் அரசு பட்ஜெட்டில் 25 சதவீதம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது; 2013ல் பயணிகளின் எண்ணிக்கை 5.4 % அதிகரிக்கப்படும்; குருபரிக்கிரமா தினத்தில் அமிர்தசரஸ்-பாட்னா ரயில் தடத்தில் புதிய ரயில்கள்; 75 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 21 பயணிகள் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்; 1000 புதிய ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்; பயணிகளுக்கு தங்கும் நிலையங்களும் ஏற்படுத்தப்படும்; பயணிகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும்; ரயில்வே துறை இக்கட்டான நிலையை கடந்து வருகிறது; 19 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கும் தண்டவாளங்கள் மாற்றி அமைக்கப்படும்; மலைப்பாதைகளில் தண்டவாளங்கள் சீரமைக்கப்படும்; உணவு தரம் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படும்; 2013ல் ஒரு லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்; ஆண்டுதோறும் 10 ரயில்வேதுறை விளையாட்டு வீரர்களுக்கு ரயில்கேல் ரத்னா விருது வழங்கப்படும். மதுரையிலிருந்து கட்ச் குடாவிற்கு வாராந்திர ரயில், பாலக்காட்டிறலிருந்து ஈரோடு, ஷாலிமர் - சென்னை, வாரத்திற்கு 3 முறை இயக்கப்பட உள்ள மன்னார்குடி - திருப்பதி, கோவை- பிகானீர், சென்னை - பெங்களூரு ஏ.சி. டபுள் டக்கர் ரயில், திருச்சி- நெல்லை இன்டர்சிட்டிரயில், சென்னை- பூரி, சென்னை - அசன்சால் உள்ளிட்ட 10 புதிய ரயில்கள் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|