பதிவு செய்த நாள்
16 மார்2012
00:19
புதுடில்லி : டீசலுக்கு, லிட்டர் அடிப்படையில் குறிப்பிட்ட மானியத் தொகையை நிர்ணயிக்கலாம் என, நேற்று வெளியிடப்பட்ட நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, பெட்ரோல் மீதான கட்டுப்பாட்டை நீக்கியதை அடுத்து, அதன் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. எனினும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை, அவற்றின் அடக்க விலைக்கும் குறைவாக, அரசு நிர்ணயித்த விலையில் இந்நிறுவனங்கள் விற்கின்றன. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் விதத்தில், மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் மானியச் செலவை குறைக்கும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்யும் டீசலுக்கு, லிட்டர் அடிப்படையில் நிலையான மானியத் தொகை வழங்க வேண்டும் என ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் டீசலுக்கு குறிப்பிட்ட மானியத் தொகை நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதற்கேற்ப உள்நாட்டில் டீசல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால், டீசல் விலை குறையும். ஆனால், மத்திய அரசு நிர்ணயிக்கும் மானியத் தொகை மட்டும் ஏற்ற, இறக்கமின்றி நிலையாக இருக்கும். அதே சமயம், டீசல் விலை உயரும்போது, நுகர்வோரின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் என்று அரசு கூறினாலும், பணவீக்கம் அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|