நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி ரூ.55,000 கோடிநாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி ரூ.55,000 கோடி ... பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பீடு : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பீடு : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ... ...
டீசல் மானியம் தொடருமா? விலையை உயர்த்த புதிய உத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
00:19

புதுடில்லி : டீசலுக்கு, லிட்டர் அடிப்படையில் குறிப்பிட்ட மானியத் தொகையை நிர்ணயிக்கலாம் என, நேற்று வெளியிடப்பட்ட நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, பெட்ரோல் மீதான கட்டுப்பாட்டை நீக்கியதை அடுத்து, அதன் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. எனினும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை, அவற்றின் அடக்க விலைக்கும் குறைவாக, அரசு நிர்ணயித்த விலையில் இந்நிறுவனங்கள் விற்கின்றன. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் விதத்தில், மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் மானியச் செலவை குறைக்கும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்யும் டீசலுக்கு, லிட்டர் அடிப்படையில் நிலையான மானியத் தொகை வழங்க வேண்டும் என ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் டீசலுக்கு குறிப்பிட்ட மானியத் தொகை நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதற்கேற்ப உள்நாட்டில் டீசல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால், டீசல் விலை குறையும். ஆனால், மத்திய அரசு நிர்ணயிக்கும் மானியத் தொகை மட்டும் ஏற்ற, இறக்கமின்றி நிலையாக இருக்கும். அதே சமயம், டீசல் விலை உயரும்போது, நுகர்வோரின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் என்று அரசு கூறினாலும், பணவீக்கம் அதிகரிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)