டீசல் மானியம் தொடருமா? விலையை உயர்த்த புதிய உத்திடீசல் மானியம் தொடருமா? விலையை உயர்த்த புதிய உத்தி ... பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பீடு : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பீடு : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ... ...
நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி பன்மடங்கு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
00:21

மும்பை : நடப்பு 2011-12ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டின் கடைசி தவணையில்(மார்ச் 15ம் @ததி), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, கடைசி காலாண்டில், செலுத்திய முன்கூட்டிய வரி, 1,650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1,500 கோடி ரூபாயாக இருந்தது. இது, 10 சதவீத வளர்ச்சியாகும்.
எல்.ஐ.சி. நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் செலுத்தியதை விட, 40 கோடி ரூபாய் கூடுதலாக, அதாவது 976 கோடி ரூபாயை முன்கூட்டிய வரியாக கட்டியுள்ளது.
இதே காலாண்டுகளில், டி.சி.எஸ். நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 200 கோடியிலிருந்து, 550 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 250 கோடியிலிருந்து 290 கோடி ரூபாயாகவும், அல்ட்ராடெக் நிறுவனம் செலுத்திய வரி, 120 கோடியிலிருந்து 170 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் செலுத்திய வரி, 170 கோடியிலிருந்து, 250 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஏசியன் பெயின்ட் செலுத்திய வரி, 90 கோடியில் இருந்து 110 கோடி ரூபாயாகவும், இந்துஸ்தான் யூனிலீவர் செலுத்திய வரி, 140 கோடியில் இருந்து 175 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும் எச்.டீ.எப்.சி. நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 340 கோடியிலிருந்து 400 கோடி ரூபாயாகவும், எச்.டீ.எப்.சி பேங்க் செலுத்திய வரி 550 கோடியிலிருந்து, 600 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. எஸ் பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, 110 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா, செலுத்திய முன்கூட்டிய வரி, 320 கோடியிலிருந்து, 400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)