பதிவு செய்த நாள்
16 மார்2012
00:21
மும்பை : நடப்பு 2011-12ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டின் கடைசி தவணையில்(மார்ச் 15ம் @ததி), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, கடைசி காலாண்டில், செலுத்திய முன்கூட்டிய வரி, 1,650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1,500 கோடி ரூபாயாக இருந்தது. இது, 10 சதவீத வளர்ச்சியாகும்.
எல்.ஐ.சி. நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் செலுத்தியதை விட, 40 கோடி ரூபாய் கூடுதலாக, அதாவது 976 கோடி ரூபாயை முன்கூட்டிய வரியாக கட்டியுள்ளது.
இதே காலாண்டுகளில், டி.சி.எஸ். நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 200 கோடியிலிருந்து, 550 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 250 கோடியிலிருந்து 290 கோடி ரூபாயாகவும், அல்ட்ராடெக் நிறுவனம் செலுத்திய வரி, 120 கோடியிலிருந்து 170 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் செலுத்திய வரி, 170 கோடியிலிருந்து, 250 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஏசியன் பெயின்ட் செலுத்திய வரி, 90 கோடியில் இருந்து 110 கோடி ரூபாயாகவும், இந்துஸ்தான் யூனிலீவர் செலுத்திய வரி, 140 கோடியில் இருந்து 175 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும் எச்.டீ.எப்.சி. நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 340 கோடியிலிருந்து 400 கோடி ரூபாயாகவும், எச்.டீ.எப்.சி பேங்க் செலுத்திய வரி 550 கோடியிலிருந்து, 600 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. எஸ் பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, 110 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா, செலுத்திய முன்கூட்டிய வரி, 320 கோடியிலிருந்து, 400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|