பதிவு செய்த நாள்
16 மார்2012
10:29
=மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82.61புள்ளிகள் அதிகரித்து 17758.46 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23.05 புள்ளிகள் அதிகரித்து 5403.55 புள்ளிகளோடு காணப் பட்டது. கபிடல்குட்ஸ், பவர், ரியலிட்டி, வங்கிகள், மெட்டல் மற்றும் ஐடி ஆகியவற்றின் பங்குகள் இன்று நல்ல விலைக்கு கைமாறின. இதன் காரணமாக வர்த்தகம் ஏற்றம் கண்டது. ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்ட அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கவில்லை. இது தவிர, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு 50.39 ஆக சரிவடைந்தது. மேலும், மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் ஏதும் இல்லாதது ஆகியவற்றால், பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|