பதிவு செய்த நாள்
16 மார்2012
11:37
புதுடில்லி : நாட்டின் 81வது மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, சர்வதேச அளவில் பொருளாதரம் பெருஞ்சரிவை சந்தித்தது. இந்நிலையிலும், இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டது. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த பட்ஜெட்டில், பல முக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவின் பல பிரிவுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், நாடு அதன்பிடியில் சிக்காமல், தொடர்ந்து வளர்ச்சியில் ஏறுமுகம் கண்டுள்ளது.
பணவீக்கம், அடுத்தாண்டு குறையும், ஏற்றுமதி வளர்ச்சியின் காரணமாக, நாட்டின் அந்நியச் செலாவணி 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, வோளண்மை, விசைத்துறை, தனியார் முதலீடு ஊக்குவிப்பு, போக்குவரத்துத்துறை மேம்பாடு உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களை கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த மானியத்தின் பங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உர மானியத்தை உழவர்களுக்கு நேரடியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிர்வாக வெளிப்படை தன்மை, கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் அரசின் லட்சியம், பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவைகளை மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. உணவு. உரம் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களுக்கு அதிகளவு மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|