பி.எப்., வட்டி8.25 சதவீதமாககுறைப்புபி.எப்., வட்டி8.25 சதவீதமாககுறைப்பு ... பங்குசந்தையில் முதலீட்டாளர்களுக்கு வரிவிலக்கு: பிரணாப் முகர்ஜி பங்குசந்தையில் முதலீட்டாளர்களுக்கு வரிவிலக்கு: பிரணாப் முகர்ஜி ...
2012-2013ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்: பிரணாப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
11:37

புதுடில்லி : நாட்டின் 81வது மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, சர்வதேச அளவில் பொருளாதரம் பெருஞ்சரிவை சந்தித்தது. இந்நிலையிலும், இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டது. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த பட்ஜெட்டில், பல முக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவின் பல பிரிவுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், நாடு அதன்பிடியில் சிக்காமல், தொடர்ந்து வளர்ச்சியில் ஏறுமுகம் கண்டுள்ளது.
பணவீக்கம், அடுத்தாண்டு குறையும், ஏற்றுமதி வளர்ச்சியின் காரணமாக, நாட்டின் அந்நியச் செலாவணி 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, வோளண்மை, விசைத்துறை, தனியார் முதலீடு ஊக்குவிப்பு, போக்குவரத்துத்துறை மேம்பாடு உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களை கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த மானியத்தின் பங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உர மானியத்தை உழவர்களுக்கு நேரடியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிர்வாக வெளிப்படை தன்மை, கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் அரசின் லட்சியம், பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவைகளை மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. உணவு. உரம் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களுக்கு அதிகளவு மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)