பதிவு செய்த நாள்
16 மார்2012
12:54
புதுடில்லி : தனி நபர் வருமான வரி விலக்கு ரூ. 1லட்சத்து 80 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு, ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்திற்கு மேல் எனில் 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக பிரணாப் கூறினார். பங்கு பரிவர்த்தனைக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் வருமானம் மீதான வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, மின் உற்பத்திக்காக இயந்திரங்கள் வாங்கும் நிறுவனங்களுக்கு தேய்மானக் கழிவு 20 சதவீதமாக அதிகரிப்பு, ராணுவத்திற்கான முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.ரூ. 3 லட்சம் வரை கடன் பெறும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 7 சதவீத வட்டி விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடனை 1 ஆண்டிற்குள் திருப்பிக் கட்டும் பட்சத்தில் 4 சதவீத வட்டியே வசூலிக்கப்படும் என்றும், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 200லிருந்து 300 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல், விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சன் ரூ. 200லிருந்து 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரணாப் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|