பதிவு செய்த நாள்
17 மார்2012
00:23
மும்பை:நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), அக்டோபர் மாதம் முதல் மார்ச் 11ம் தேதி வரை, உள்நாட்டில் பருத்தி வரத்து, 2.34 கோடி பொதிகளாக (ஒரு பொதி-170 கிலோ) குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தின் இதே காலத்தில், 2.54 கோடி பொதிகளாக இருந்தது. ஆக, நடப்பு பருவத்தில், பருத்தி வரத்து 6.4 சதவீதம் குறைந்துள்ளது என, இந்திய பருத்தி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிக அளவில் பருத்தி உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. பருத்தி வரத்து குறைந்துள்ள போதிலும், நடப்பு பருவத்தில் 3.45 கோடி டன் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, 100 கிலோ கச்சா பருத்தியின் விலை 3,300 ரூபாயாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு மார்ச் மாதம் 7,000 ரூபாயாக இருந்தது. கடந்த ஓராண்டாக விதை, உரம் மற்றும் எரிபொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே சமயம், பருத்தி விலை சரிவடைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகளைக் காக்க, பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அதிகரிக்க வேண்டும் என, பருத்தி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|