பதிவு செய்த நாள்
17 மார்2012
00:27
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று சுணக்கம் கண்டது. காலையில், வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தை, பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு மந்தமடைந்தது. இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், நுகர் பொருட்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
அதேசமயம், எண்ணெய், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 209.65 புள்ளிகள் சரிவடைந்து, 17,466.20 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,871 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,426.58 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டும், 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 62.60 புள்ளிகள் குறைந்து, 5,317.90 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,445.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,305 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|