பதிவு செய்த நாள்
17 மார்2012
10:12
இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிப்பின் மூலம், இனி எப்போது தங்கம் வாங்கினாலும், கிராமுக்கு 100 ரூபாய் அதிகம், "அழ' வேண்டியிருக்கும். இதனால், நடுத்தர மக்களின் தங்கக் கனவில் மத்திய அரசே மண் போட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை மாறக்கூடியது தங்கம் விலை. அதில், நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இறக்குமதி தங்கத்துக்கு விதிக்கப்பட்டு வந்த சுங்க வரி, நான்கு சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில், இந்த சுங்க வரி, வெறும் ஒரு சதவீதமாகத் தான் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன் தான், இரண்டு சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பட்ஜெட்டில், அதை நான்கு சதவீதமாக மாற்றிவிட்டனர். இப்படி, ஒரே மாதத்தில் நான்கு மடங்கு வரி அதிகரிக்கப்பட்டது, வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|