பதிவு செய்த நாள்
17 மார்2012
23:49
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற மார்ச் 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29 ஆயிரத்து 396 கோடி டாலராக (14 லட்சத்து 69 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, சென்ற மார்ச் 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29 ஆயிரத்து 499 கோடி டாலராக (14 லட்சத்து 74 ஆயிரத்து 950 கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தில், எவ்வித மாற்றமும் இன்றி, 2,813 கோடி டாலர் என்ற அளவிலேயே இருந்தது. எஸ்.டீ.ஆர். மதிப்பு, 446 கோடி டாலரிலிருந்து, 445 கோடி டாலராக குறைந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 281 கோடி டாலரிலிருந்து, 280 கோடி டாலராக குறைந்துள்ளது. அமெ ரிக்க டாலருக்கு எதிரான, யூரோ உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|